அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினைஇருக்கிறது.'50:35<<>>"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

நம்மில் முதியவருக்கு மரியாதை


மனிதர்களை இழிவாகக் கருதாமல் அவர்களுக்கு கண்ணியம் அளிக்க வேண்டுமென்று இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது. குறிப்பாக தகுதி உடையவர்களுக்கு கெரவமளிக்க வேண்டும். வயது முதிர்ந்தவர்கள், கல்வியாளர்கள், சான்றோர்களுக்கு மரியாதை செய்யவேண்டும். இப்பண்புதான் ஒரு முஸ்லிம் இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்தவர் என்பதற்கான அடையாளமாகும். இப்பண்பை இழந்தவர் இச்சமுதாய உறுப்பினர் என்று சொல்வதற்கே அருகதையற்றவர். இக்கருத்தைப் பின்வரும் நபிமொழி உறுதிப்படுத்துகிறது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”நம்மில் முதியவருக்கு மரியாதை செய்யாதவனும், சிறியவருக்கு இரக்கம் காட்டாதவனும், நமது (சமுதாய) அறிஞரின் உரிமையை அறிந்திராதவனும் என் உம்மத்தைச் சார்ந்தவன் அல்லன்.” (ஸுனன் அஹமத், முஃஜமுத் தப்ரானி)
முதியோர் மதிக்கப்படுவதும், சிறியவரைவிட அவரை முன்னிலைப் படுத்துவதும் இச்சமூக மேன்மையின் அடையாளமாகும். மேலும் அது இச்சமூகத்தவர்கள், மனிதநேயப் பண்புகள் குறித்து, அறிந்தவர்கள், ஒழுக்கசீலர்கள் என்பதற்கான ஆதாரமாகும். அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இக்கருத்தை முஸ்லிம்களின் உள்ளத்தில் உறுதிப்படுத்தி அப்பண்புகளின் அவசியத்தை உணர்த்தினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் சிலர் வந்திருந்தபோது அவர்களில் சிறிய வயதுடைய அப்துர் ரஹமான் இப்னு ஸஹல் (ரழி) பேச ஆரம்பித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ”பெரியவர்களுக்கு மரியாதை கொடு” என்றார்கள். அப்துர் ரஹமான் (ரழி) அவர்கள் மெªனமானார். பிறகு வயதில் மூத்தவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பேசினர்.
நபி (ஸல்) அவர்கள் வயது முதிர்ந்தவர்களையும், சான்றோர்களையும் கண்ணியப்படுத்துவதை மிக அதிகமாக வலியுறுத்தி, அவ்வாறு கண்ணியப்படுத்துவது அல்லாஹவை கண்ணியப் படுத்துவதில் கட்டுப்பட்டது என்று விவரித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”முஸ்லிமான வயோதிகரையும், குர்ஆனை அறிந்து அதில் வரம்பு மீறாமல், அதைப் புறக்கணிக்காமல் இருப்பவரையும், நீதம் செலுத்தும் அதிகாரியையும் கண்ணியப்படுத்துவது அல்லாஹவைக் கண்ணியப்படுத்துவதில் கட்டுப்பட்டதாகும்.” (ஸுனன் அபூதாவூத்)
இந்தப் போதனைகள் முஸ்லிம்களின் முந்திய தலைமுறைக்கு நற்பலன்களை அளித்தன; மேன்மைக்குரிய குணங்களை தங்களுக்குள் கொண்ட உயர்ந்த மனிதர்களை உருவாக்கின. முதியோரையும் சான்றோரையும் மதிப்பதில் அவர்கள் சிறந்த முன்மாதிரிகளாகத் திகழ்ந்தார்கள். சில உதாரணங்களை நாம் இங்கு குறிப்பிடுகிறோம்:
ஸமுரா இப்னு ஜுன்துப் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ”நான் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சிறுவனாக இருந்தேன். அவர்களிடமிருந்து (ஹதீஸ்களை) மனனமிட்டிருந்தேன். அதை நான் வெளியே சொல்லத் தடையாக இருந்ததெல்லாம் அங்கு என்னைவிட வயதில் மூத்த பெரியவர்கள் இருந்தார்கள் என்பதுதான்”. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இங்கு மற்றோர் அழகிய முன்மாதிரியைக் காண்போம்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சபையில் இருந்தார்கள். அங்கு அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) இருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் கேட்ட கேள்விக்கான பதிலைத் தெரிந்திருந்தும் அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) அவர்களை கண்ணியப்படுத்தும் விதமாக இப்னு உமர் (ரழி) மெªனமாக இருந்து விட்டார்கள்.
இது பற்றி இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ”எனக்கு ஒரு மரத்தைப்பற்றி அறிவியுங்கள். அது முஸ்லிமுக்கு உதாரணமாகும். இரட்சகனின் உத்தரவுப்படி எல்லா நேரங்களிலும் கனிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதன் இலைகள் உதிர்வதில்லை (அது என்ன மரம்)” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். என் மனதில் அது ‘பேரீச்ச மரம்’ என்று தோன்றியது. அந்த இடத்தில் அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) இருந்ததால் அதைக் கூறத் தயங்கினேன். அந்த இருவரும் பேசாமலிருந்ததால் நபி (ஸல்) அவர்கள் ”அது பேரீச்ச மரம்” என்று கூறினார்கள். என் தந்தையுடன் வெளியே வந்தபோது ”எனது தந்தையே என் மனதில் ‘பேரீச்சமரம்’ என்று தோன்றியது” என்றேன். அவர்கள் ”அதைச் சொல்லாமல் உன்னைத் தடுத்தது எது?” அதை நீ கூறியிருந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்குமே” என்றார்கள். ”உங்களையும், அபூபக்கர் (ரழி) அவர்களையும் பேசாமலிருக்கக் கண்டேன். எனவே நான் அதைக் கூற விரும்பவில்லை என்று கூறினேன்” என இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இஸ்லாம், சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்குமென தனித்தனி அந்தஸ்தை வழங்கியுள்ளது. அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ”நபி (ஸல்) அவர்கள் மனிதர்களை அவர்களுக்குரிய அந்தஸ்தில் வைக்குமாறு எங்களை ஏவினார்கள்.” இந்த ஹதீஸை இமாம் முஸ்லிம் அவர்கள் தனது முன்னுரையில் எழுதியிருக்கிறார்கள்.
ஒருவரை அவரது அந்தஸ்துக்கேற்ப மதிக்க வேண்டுமெனில், அவர்களது அந்தஸ்தை அறிந்திருக்க வேண்டும். முதலில் மார்க்க அறிஞர்கள், குர்ஆனை இதயத்திலும் செயலிலும் சுமந்திருப்போர், மேதைகள் மற்றும் சான்றோர்களை முன்னிலைப்படுத்த வேண்டும்.
அல்லாஹவின் மார்க்க நெறியில் நம்பிக்கையாளர்களாக இருந்து, சத்தியத்தை உரக்கச் சொல்லி, இஸ்லாமிய அடையாளங்களை பாதுகாப்பதை பணியாகக் கொண்டிருக்கும் அறிஞர்களுக்கு இஸ்லாமிய சமூகத்தில் பெரும் அந்தஸ்தும் உயர்வும் உண்டு.
…. (நபியே) நீர் கேளும்: கல்வி அறிவுடையோனும் கல்வி அறிவில்லா தோனும் சமமாவார்களா? (இந்தக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் எல்லாம் (கல்வி) அறிவுடையோர்தாம். (அல்குர்ஆன் 39:9)
இஸ்லாமிய சமூகத்தில் குர்ஆனை நெஞ்சில் சுமந்து கொண்டிருப்பவர்களுக்கும் உயரிய அந்தஸ்து உண்டு. அவர்களை சபைகளிலும் தொழுகைக்கு இமாமாகவும் முன்னிலைப்படுத்த வேண்டுமென நபிமொழி வலியுறுத்துகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒரு கூட்டத்தாருக்கு அல்லாஹவின் வேதத்தை அதிகம் ஓதத் தெரிந்தவர் இமாமாக நிற்கட்டும். அவர்கள் குர்ஆன் ஓதுவதில் சமமானவர்களாயிருந்தால் சுன்னத்தை நன்கறிந்தவரும், அவர்கள் சுன்னத்தை அறிவதில் சமமானவர்களாக இருந்தால் ஹிஜ்ரத் செய்வதில் முந்தியவரும், ஹிஜ்ரத்தில் சமமானவர்களாக இருந்தால், வயதில் அதிகமானவரும் இமாமாக நிற்கட்டும். ஒரு மனிதர் மற்றொரு மனிதருக்கு உரிமையுள்ள இடத்தில் அவரது அனுமதியின்றி தொழவைக்க வேண்டாம். மற்றவருடைய வீட்டில் அனுமதி இல்லாமல் அவருக்குரிய இருக்கையில் அமர வேண்டாம்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
சற்று முன்சென்ற ஒரு நபிமொழியை நினைவு கூர்வோம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”முஸ்லிமான வயோதிகரையும், குர்ஆனை அறிந்து அதில் வரம்பு மீறாமலும், அதைப் புறக்கணிக்காமலும் இருப்பவரையும், நீதம் செலுத்தும் அதிகாரியையும் கண்ணியப் படுத்துவது அல்லாஹவைக் கண்ணியப்படுத்துவதில் கட்டுப்பட்டதாகும்.” (ஸுனன் அபூதாவூத்)
நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போர்க்களத்தில் ஷஹீதானவர்களின் உடல்களை இரண்டிரண்டாக கப்ரில் வைத்தபோது ”குர்ஆனை அதிகமாக மனனமிட்டவர் இந்த இருவரில் யார்?” என்று கேட்டார்கள். அப்போது எவரை சுட்டிக்காட்டப்பட்டதோ, அவரை முதலில் கப்ரின் பக்கவாட்டில் வைத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)
நபி (ஸல்) அவர்கள் மனிதர்களின் அந்தஸ்திற்கேற்ப மதிப்பளிக்க வேண்டுமென்பதை தொழுகைக்கான அணிவகுப்பை சரி செய்தபோது அவர்கள் கூறியதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”எனக்குப் பின் வரிசையில் உங்களிலுள்ள சான்றோர்களும் கல்விமான்களும் நிற்கட்டும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
மேற்கூறப்பட்ட நபிமொழி, மனிதர்கள் அந்தஸ்த்துக்கேற்ப மதிக்கப்பட வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்களின் கண்ணோட்டத்தை மிகத்தெளிவாக விவரிக்கிறது. அறிவுடையோர்களும், சான்றோர்களும் தங்களது அந்தஸ்த்திற்கேற்ப முஸ்லிம்களின் பல்வேறு காரியங்களுக்குப் பொறுப்பேற்பவர்கள் என்ற காரணத்தினால் நபி (ஸல்) அவர்களை முன்னிலைப்படுத்தினார்கள். ”ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள் சான்றோர்களுக்கு கண்ணியத்தில் முதலிடம் அளித்தார்கள். மார்க்கப் பற்றில் உள்ள அந்தஸ்த்திற்கேற்ப கண்ணியமளித்தார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் சங்கைக் குரியவராக இருப்பவரை சங்கை செய்தார்கள், அவரையே அக்கூட்டத்தின் தலைவராகவும் ஆக்கினார்கள். அவர்களது சபை நேர்மையான நடத்தையுள்ள சிறந்த இறை விசுவாசிகளால் செழிப்படைந்து இருந்தது. அவர்களுக்கு மத்தியில் இறையச்சத்தை அடிப்படையாகக் கொண்டே ஏற்றத் தாழ்வு இருந்தது. நபித்தோழர்கள் முதியோர்களை கெªரவிப்பார்கள், சிறியோர்கள் மீது கருணை காட்டுவார்கள், தேவையுள்ளோரை தங்களின் உபகாரத்திற்கு தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள், தங்களிடம் பயணித்து வந்தவர்களை பாதுகாப்பார்கள்” என ஹஸன் (ரழி) தனது தந்தை அலீ (ரழி) அவர்களின் வாயிலாக அறிவிக்கிறார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)
முஸ்லிம் இந்த உண்மைகளை அறிந்து சமூகத்தின் அனைத்து மக்களுடனும் முன்மாதிரியாக நடந்து கொள்வதுடன் குறிப்பாக அறிஞர்கள் இறையச்சமுடையவர்கள் சான்றோர்களிடம் அவர்களது அந்தஸ்திற்கேற்ப நடந்துகொள்வார்.
நல்லோருடன் இணைந்திருப்பார்
முஸ்லிமின் பண்புகளில் ஒன்று நல்லோருடன் இணைந்திருப்பதாகும். அவர்களுடன் நெருங்கி அவர்களிடம் துஆவை கேட்டுப்பெற வேண்டும். அவர் எவ்வளவுதான் உயர் அந்தஸ்தில் இருந்தாலும் தயக்க மில்லாமல் அவர்களுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும்.
(நபியே!) எவர்கள் கஷ்டங்களைச் சகித்து, தங்கள் இறைவனின் திருமுகத்தையே நாடி, அவனையே காலையிலும் மாலையிலும் (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடன் உம்மையும் நீர் ஆக்கிக் கொள்ளும். இவ்வுலக அலங்காரத்தை நீர் விரும்பி அத்தகைய (நல்ல)வர்களை விட்டு உம் கண்களைத் திருப்பிவிடாதீர். அன்றி, தன் சரீர இச்சையைப் பின்பற்றியதன் காரணமாக எவனுடைய இருதயத்தை நம்மைத் தியானிப்பதிலிருந்து நாம் திருப்பிவிட்டோமோ அவனுக்கும் நீர் வழிப்படாதீர். அவனுடைய காரியம் எல்லை கடந்துவிட்டது. (அல்குர்ஆன் 18:28)
நல்லோர்களுடன் சேர்ந்திருப்பது இறையச்சத்தையும், சத்தியத்தை அடைந்து கொள்வதற்குரிய தேட்டத்தையும், நற்பண்புகளையும், மார்க்க அறிவையும் வளரச் செய்யும். இந்த நற்பண்புகளைக் கொண்டே நாமும் நல்லவர்களாக முடியும். நபி மூஸா (அலை) அவர்கள் கல்வி கற்றுக் கொள்வதற்காக நல்லடியாரைத் தேடிச் சென்றபோது ஒழுக்கத்துடனும் பணிவுடனும் கூறுகிறார்கள்.
மூஸா அவரை நோக்கி, ”உமக்கு கற்பிக்கப்பட்ட கல்வியில் பயனளிக்கக் கூடியதை நீர் எனக்கு கற்பிக்கும் நிபந்தனை மீது நான் உம்மைப் பின்பற்றலாமா?” என்று கேட்டார். (அல்குர்ஆன் 18:66)
அதற்கு அந்த நல்லடியார் பதில் கூறுகிறார்:
அதற்கவர் என்னுடன் பொறுமையாக இருக்க நிச்சயமாக நீர் சக்தி பெறமாட்டீர். (அல்குர்ஆன் 18:67)
அப்போது நபி மூஸா (அலை) அவர்கள் மிக பணிவோடும் அன்போடும் கூறுகிறார்கள்: ”அதற்கு மூஸா இறைவனருளால் (எவ்விஷயத்தையும்) சகித்திருப்பவனாகவே நீர் என்னைக் காண்பீர்; எவ்விஷயத்திலும் நான் உமக்கு மாறு செய்யமாட்டேன்” என்று கூறினார். (அல்குர்ஆன் 18:69)
உண்மை முஸ்லிம் நல்லோர்களுடன் மட்டுமே இணைந்திருப்பார். ஏனெனில் மனிதர்கள் சுரங்கத்தைப் போன்றவர்கள். அதில் உயர்ந்ததும் இருக்கும், அற்ப்பமானதும் இருக்கும் என்பதை மார்க்க போதனையிலிருந்து அறிந்திருப்பார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”மனிதர்கள் தங்கம், வெள்ளி சுரங்கத்தைப் போன்ற சுரங்கமாவர். அவர்களில் அறியாமைக் காலத்தில் சிறந்தவர்களாக இருந்தவர்கள் மார்க்க அறிவை அடைந்து கொண்டால் இஸ்லாமிலும் அவர்களே சிறந்தவர்கள். ஆன்மாக்கள் (ஆலமுல் அர்வாஹில்) ஒன்று திரட்டப்பட்டதாயிருக்கும். (அங்கு) அறிமுகமானது (இங்கு) நேசித்துக் கொள்கிறது. (அங்கு) அறிமுகமாகாதது (இங்கு) முரண்படுகிறது.” (ஸஹீஹ் முஸ்லிம்)
நண்பர்கள் இருவகையாவர். நல்ல நண்பர், கெட்ட நண்பர். நல்ல நண்பருக்கு உதாரணம் கஸ்தூரியை வைத்திருப்பவர் போல. அவருடன் அமர்வதால் நல்ல நறுமணத்தையும் மனதிற்கு மகிழ்ச்சியையும் அடைந்து கொள்ளலாம். கெட்ட நண்பருக்கு உதாரணம் கொல்லனைப்போல. அவனிடம் அமர்வதால் நெருப்பின் ஜுவாலையையும், புகையையும், கரியையும்தான் அடைந்து கொள்ள முடியும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்ல நண்பருக்கும் கெட்ட நண்பருக்கும் உதாரணம் கஸ்தூரியை வைத்திருப்பவனுக்கும் கொல்லனுக்கும் ஒத்ததாகும். கஸ்தூரியை வைத்திருப்பவன் உனக்கு தடவி விடலாம் அல்லது அதிலிருந்து கொஞ்சம் நீ வாங்கிக் கொள்ளலாம் அல்லது நறுமணத்தையாவது நீ நுகரலாம். கொல்லன் உனது ஆடையை எரித்துவிடுவான் அல்லது அவனிடமிருந்து துர்நாற்றத்தை நுகர்வாய். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
கண்ணியமிகு நபித்தோழர்கள் நல்லோர்களை சந்திப்பதில் பேராவல் கொண்டிருந்தனர். அந்நல்லோர்கள் அல்லாஹவை நினைவூட்டி, உள்ளங்களை மென்மையாக்கி, அல்லாஹவின் அச்சத்தால் கண்களை அழவைத்தனர்.
உம்மு அய்மன் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை சிறு வயதில் வளர்த்தவர்கள். நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு மிக அதிகம் சங்கை செய்வார்கள். உம்மு அய்மன் எனது தாய் என்றும் கூறுவார்கள்.
அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் உமர் (ரழி) அவர்களிடம் ”உம்மு அய்மன் (ரழி) அவர்களை நபி (ஸல்)அவர்கள் சந்தித்து வந்ததுபோல் நாமும் சந்திக்கச் செல்வோம்” என்று கூறினார்கள். உம்மு அய்மன் (ரழி) அவர்களிடம் அவ்விருவரும் சென்றபோது அழுதார்கள். இருவரும் ”ஏன் அழுகின்றீர்கள்? அல்லாஹவிடத்தில் உள்ளது அல்லாஹ்வின் தூதருக்கு மிகச் சிறந்ததாகும்” என்றார்கள்.
அப்போது, உம்மு அய்மன் (ரழி) அவர்கள் ”நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹவிடமுள்ள (பாக்கியமான)து மிகச் சிறந்தது என்பதைப்பற்றி தெரியாமல் நான் அழவில்லை. என்றாலும், வானத்திலிருந்து வஹீ வருவது நின்றுவிட்டதே! என்பதற்காக அழுகின்றேன்” என்றார்கள். இந்த வார்த்தையின் மூலம் அவர்கள் அவ்விருவரையும் அழத்தூண்டி விட்டார்கள். அவருடன் சேர்ந்து அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) அழ ஆரம்பித்து விட்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
இம்மாதிரியான சபைகளை மலக்குகள் சூழ்ந்து கொள்கிறார்கள். அதை அல்லாஹ் தனது கருணையால் மூடிக்கொள்கிறான். ஈமான் உறுதி அடைகிறது. ஆன்மா தூய்மையடைந்து இதயம் பிரகாசிக்கிறது. எனவே அவர் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும், தான் சார்ந்துள்ள சமுதாயத்துக்கும் நன்மை பயப்பவராகிறார். இதுதான் தனிமனிதருக்கும் சமூகத்திற்கும் இஸ்லாமின் வழிகாட்டுதலாகும்.



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

வட்டி ஒரு பெரும் பாவம்

Svr.pamini 1. வட்டி என்றால் என்ன?: அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது. '...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279) இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130) 2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு: வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது. 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275) வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. 1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது. 2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும். 3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும். 3. வட்டி ஒரு பெரும் பாவம் : 'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 4. வட்டி ஒரு கொடிய குற்றம் : 'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ) மற்றொரு அறிவிப்பில், 'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன். 5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் : 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை: 1. நிரந்தர நரகம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085) நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர். ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான். 7. போர்ப் பிரகடணம்: வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள். 8. வட்டி வாங்குவோரின் அவல நிலை : 1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275) 2. நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962) 3. அல்லாஹ்வின் சாபம். 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 4. போர் பிரகடணம். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) 9. அடமானம்: அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார். இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன. முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும். நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும். 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 10. ஒத்தி வட்டியா?: ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும். ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 11. பேங்க்கில் பணம் போடலாமா? : வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது. இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது. இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது. இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும். 12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?: ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும். 13. குலுக்கல் சீட்டு: குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது. அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. 14. தவணை முறையில் பொருள் வாங்குவது: இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று. இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது. 15. வங்கியில் வேலை செய்வது: 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 16. பகடி கூடுமா?: பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார். பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது. 17. முடிவுரை: பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக! Svr.pamini