அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினைஇருக்கிறது.'50:35<<>>"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

பிரார்த்தனை....

”பிரார்த்தனை தான் வணக்கமாகும்.  (ஏனெனில்) உங்கள் இறைவன் கூறுகின்றான்: என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கின்றேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பிரார்த்தனையைத் தவிர வேறு எந்த செயலாலும் விதியை மாற்றிக் கொள்ள முடியாது. நற்செயல்களைத் தவிர எந்தச் செயலாலும் ஆயுளை நீடிக்கச் செய்ய முடியாது.
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.
(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.
(மேலும்,) பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள்; அச்சத்தோடும் ஆசையோடும் அவனை பிரார்த்தியுங்கள் - நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது.
மனிதனுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமானால் நம்மை அழைக்கிறான். பின்னர் நாம் அவனுக்கு நமது அருட்கொடையை வழங்கினால் 'எனது அறிவால் இது எனக்குத் தரப்பட்டது' எனக் கூறுகிறான். அவ்வாறல்ல! அது ஒரு சோதனை! எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.(அல்குர்ஆன் 39.49)

அச்சத்துடனும் நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.  (அல்குர்ஆன் 7:56)

நீங்கள் பிரார்த்தித்தால் (உங்கள்) கோரிக்கையை வலியுறுத்திக் கேளுங்கள்.  ‘அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு‘ என்று சொல்ல வேண்டாம்.  (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பது ஆகாது.)  ஏனெனில் அவனை நிர்ப்பந்திப்பவர் எவருமில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உங்களில்எவரேனும்பிரார்த்தித்தால் நீநாடினால்என்னைமன்னிப்பாயாக!‘ என்றுகேட்கவேண்டாம்.  (உங்கள்) கோரிக்கையைவலியுறுத்திக் 
கேளுங்கள்.  மகத்துவம்மிக்கதைக்கேளுங்கள்.  ஏனெனில்அல்லாஹ்வழங்கியஎந்தஒன்றும் அவனுக்குப்பெரிதாகத்தெரிவதில்லைஎன்றுஅல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்கள்கூறினார்கள்.



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

லைலத்துல் கத்ர்.....



இந்த ரமளான் மாதத்தில் நோன்பை தவிர்த்து இன்னொரு அருட்கொடையாக திருக்குர்ஆன் இறக்கப்பட்ட லைலதுல் கத்ர் எனும் பரக்கத் நிறைந்த இரவை அல்லாஹ் பொக்கிஷமாக கொடுத்திருக்கிறான்.ஆயிரம் மாதங்களை விட இந்த ஒரு இரவு சிறப்பு மிக்கதாக அல்லாஹ் தன் திருமறையில் தெரிவிக்கிறான்.

                       
   நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குரான் 97:1-5)  
                                                                                            


 அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை ஏதிர்பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு கத்ரின் இரவை அறிவித்துக் கொடுப்பதற்காக வெளியில் வந்தார்கள். அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டார்கள். அப்போது நபியவர்கள் கூறினார்கள். லைலத்துல் கத்ரின் இரவை உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பதற்காக நான் வெளியாகி வந்தேன். இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதைப் பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான் என்றுகூறி அது உங்களுக்கு நலமாக இருக்கக் கூடும் என்றார்கள். ஆகவே அதை இருபத்தி ஒன்று,இருபத்தி மூன்று, இருபத்தி ஐந்து, இருபத்தி ஏழு, இருபத்தி ஒன்பது ஆகிய நாட்களில் தேடிப்பெற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  


அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல்கத்ரின் இரவை நான் {ஆயிஷா(ரலி)}அறிந்து கொண்டால் அதில் என்ன கூறவேண்டும் என்று கேட்டேன்.இவ்வாறு கூறுமாறு நபியவர்கள் கூறினார்கள்.

    
அல்லாஹம்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபு அன்னீ.
பொருள்: இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக.


                                                                                     
விளக்கம்: லைலத்துல் கத்ர் என்பது ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தின் ஒற்றைப்படை நாட்களில் வரக்கூடிய ஒரு இரவுக்குச் சொல்லப்படும். இந்த இரவில் செய்யும் வணக்கத்திற்கு ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்திற்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மை கிடைக்கும் என்று அல்லாஹ் சூரத்துல் கத்ரில் கூறுகின்றான். 




அதாவது ஒரு இரவு செய்யும் அமலினால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மை கிடைக்கின்றது. இதனால்தான் நபி(ஸல்) அவர்கள் அந்த இரவை அடைந்து கொள்வதற்காக நோன்பின் கடைசிப்; பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். "83 வருடம் நாம் வாழ்வோமா?" என்பதே கேள்விக்குரியானது! ஆனால் ஒருநாள் அமல் செய்வதினால் அந்த நன்மையை அல்லாஹ் நமக்கு அள்ளி வழங்குகின்றான். 



இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களை விட இந்தப்பத்து நாட்களில் நபியவர்கள் அதிக வணக்கத்தில் ஈடுவடுவார்கள். முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி(ஸல்) அவர்களே இப்படி அதிக அமல்கள் செய்திருக்கும் போது நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் எவ்வளவு அதிகமாக அமல்களில் ஈடுபட வேண்டும். சிந்தித்துப்பாருங்கள்! 


ஆகவே அச்சிறப்பான இரவில் தொழுகை, குர்ஆன் ஒதுவது, திக்ர் செய்வது, பாவமன்னிப்புத் தேடுவது, தர்மம் செய்வது போன்ற நற்கருமங்களை அதிகமதிகம் செய்துவிட்டு மற்ற நாட்களை விட்டுவிடக்கூடியவர்கள் நம்மில் அதிகமானவர்கள் இருக்கின்றார்கள். இது நல்ல முடிவல்ல.

                                                             
நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவைப் பற்றி சொல்வதற்காக வெளியில் வந்தார்கள். அல்லாஹ் அதை மறக்கடித்து விட்டான். ஆனால் அந்த இரவை நாம் தெரிந்து கொள்வதற்கு நபி(ஸல்) அவர்கள் சில அடையாளங்களைக் கூறினார்கள்.

  
"ரமளான் மாதத்தின் கடைசிப்பத்து நாட்களின் ஒற்றைப்படை நாட்கள்" இப்படி கூறுவதினால் "ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களில் அமல்கள் செய்யப் தேவையில்லை" என்று விளங்கிக்கொள்ளக்கூடாது. மற்ற 20நாட்களை விட இந்த நாட்களில் அதிக அமல்களை செய்யவேண்டும்.

அல்லாஹ் லைலத்துல் கத்ர் எனும் ஓர் இரவின் நன்மையைப்பற்றி குறிப்பிடும்போது, "அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது" என்று கூறுகின்றான். பார்க்க (97 :3)


லைலத்துல் கத்ரில் அதிக அளவு பிரார்த்தனை புரிய நபி(ஸல்) அவர்கள் ஒரு துவாவை கற்றுதந்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன். மன்னிப்பையே விரும்புபவன். எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!)
அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹமத்.



முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.!!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி (35)
இத்தகைய புனிதமிக்க ரமளானின் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதிக உபரியான வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வல்ல இறைவனின் அருளை அடைவோமாக!
அல்லாஹ் நமக்குப் புனித ரமலானின் சிறப்புமிகு நாட்களின் அமல்களை முறையாக நிறைவேற்ற உதவிடவும் நமது பிராத்தனைகளை ஏற்று அருள் புரிந்திடவும் நமக்கு பாவமன்னிப்பளித்திடவும் நம் அனைவரையும் நரகில் இருந்து பாதுகாத்திடவும் புனித ரமலானின் அனைத்து நன்மைகளையும் முழுமையாக பெற்றிடும் விதத்தில் அல்லாஹ்வின் ஏற்பிற்குரியதாக நமது அமல்கள் அமைந்திடவும் அதன் மூலம் நமது இம்மை மறுமை வாழ்க்கை வெற்றி பெற்றிடவும் இந்த புனித ரமலான் முதல் என்றென்றும் பிராத்திப்போமாக.




Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

ரமலான் மாதம்

ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-)
நூல்கள்: புகாரீ (1898), முஸ்-ம் (1956)

"ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-)
நூல்கள்: புகாரீ (1899), முஸ்-ம் (1957)

ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.

இதன் கருத்து என்ன? ரமலான் மாதம் வந்து விட்டால் அன்றைய தினம் மரணித்தவர் சுவர்க்கவாதியா? அல்லது ரமலான் மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச் செயல்களும் நடைபெறாதா? என்பன போன்ற சிந்தனை இந்தச் செய்திகளைப் பார்த்தால் நமக்குத் தோன்றலாம். ஆனால் அந்த ஹதீஸ்களின் கருத்து இவை அல்ல!

"ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன'' என்பதன் கருத்து, ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குரிய வழிவகைகள் நிறைந்திருக்கின்றன என்பது தான்.

மேலும் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும்.

இந்தக் கருத்தை முஸ்-ம் (1957வது) அறிவிப்பில் "ரமலான் வந்து விட்டால் ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன'' என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது. மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளைக் கூறும் மற்ற ஹதீஸ்களும் இதை வலுவூட்டுகின்றன.

"ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்'' என்றால் ஷைத்தான்கள் தங்கள் வேலைகளை இம்மாதத்தில் சரிவர செய்ய முடியாது; ஷைத்தான்களின் செயல்களை முறியடிக்கக்கூடிய வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது தான்.

இம்மாதத்தில் ஷைத்தான்களின் காரியங்கள் அறவே நடக்காது என்பது இதன் பொருள் அல்ல! ஏனெனில் ரமலான் மாதத்தில் தவறான காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் நபி (ஸல்) அவர்களே சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

"யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரீ 1903

இந்த நபிமொழி, நோன்புக் காலங்களில் ஷைத்தானின் வேலைகளும் இருக்க வாய்ப்பு உண்டு என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மேலும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு வைத்துக் கொண்டு ஒரு நபித்தோழர் உடலுறவு கொண்டார் என்ற செய்தியும் (பார்க்க: புகாரீ 1936) இக்கருத்தை உறுதி செய்கிறது.
கூடுதல் நன்மைகளைப் பெற்றுத் தரும் மாதம்

மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூ-யை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும்.

"ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநுôறு மடங்கு வரை கூ- வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூ- வழங்குவேன்'' என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் அபூஹுரைரா (ர-)
நுôல்: முஸ்-ம் (2119)

கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல்

ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதன் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான்.

யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப்படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-)
நூல்கள்: புகாரீ (1901), முஸ்-ம் (1393)



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

நோன்பு

ரமலான் மாதத்தில் அல்லாவிற்காக உணவை விட்டுவிட்டு அல்லாவின் சிந்தனையுடன் நோன்பு நோற்கும் அனைவருமே நோன்பாளிகள்தான். ஆனாலும், நோன்பாளிகளில் சில வேற்றுமை உண்டு.ஒரு சிலர் இருக்கிறார்கள். அதாவது ரமலான் மாதத்தில் உணவு உண்ணக் கூடாது என்ற நோன்பை மட்டும் கடைபிடிப்பவர்கள். அதாவது கடமைக்காக உணவை மட்டும் சாப்பிடாமல் இருப்பார்கள். மற்றபடி எல்லாத் தவறான காரியங்களிலும் எப்போதும் போல் செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள். பொய் சொல்வது, தவறான காரியங்களில் ஈடுபடுவது, மற்றவர்களுடன் சண்டை போடுவது, திட்டுவது போன்றவற்றில் எவ்வித தயக்கமும் இன்றி ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். இவர்கள் என்னதான் காலையில் இருந்து மாலை வரை உண்ணாமல், பருகாமல் நோன்பு இருந்தாலும், இவர்களது சிந்தனையில் அல்லாவின் நினைவு இருந்திருக்கவில்லை. நோன்பு இருப்பது கடமையாக்கப்பட்டதன் காரணத்தையே இவர்கள் உணராமல் நோன்பு இருப்பதால் என்ன பயன் கிடைத்துவிடும். இப்படிப்பட்டவர்கள் நோன்பிருப்பதால் அல்லா எந்த அக்கறையும் செலுத்துவதில்லை என்று கூறப்பட்டுள்ளது. நோன்பு எனும் தூய வழிபாடு கடமை ஆக்கப்பட்டதன் நோக்கமே மனிதன் நல்லவனாக மாற வேண்டும் என்பதுதான். நோன்பின் இந்த நோக்கத்தையும் உயிரோட்டத்தையும் அறியாத நோன்பாளிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த நோன்பின் அடிப்படை என்ன என்பதை இப்படிப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும். ஏன் உண்ணாமல், பருகாமல் இருக்கிறோம் என்று யோசிக்க வேண்டும். இப்படிப்பட்ட நோன்பாளிகள் குறித்து இறைத் தூதர் (ஸல்) அவர்கள் இப்படி கூறுகிறார். அதாவது, "எவர் ஒருவர் (நோன்பு நோற்கும்போது) பொய் பேசுவதையும், தவறான முறையில் செயல்படுவதையும் விட்டுவிடவில்லையோ அவர் பசித்திருப்பதையும், தாகித்திருப்பதையும் பற்றி இறைவனுக்கு எந்த அக்கறையும் இல்லை." என்கிறார்.நோன்பின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, நபிகள் காட்டிய வழியில் நோன்பை நோற்பதே அல்லாவின் கவனத்தை ஈர்க்கும் செயலாகும். “ஈமான் கொண்டவர்களே! உங்களக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதியாக்கப்பட்டிருந்தது போல் உங்கள்மீது நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் நீங்கள் துாய்மையுடையோகராகலாம்” அல்குர்ஆன் 2:183மதங்கள் என்றால்,மனிதனைக் காடுகளிலும், வனாந்தரங்களிலும், குகைகளிலும், மடாலயங்களிலும், சர்ச்சுகளிலும் ஒழுக்க உயர்வைப் பெறுவதற்காக, தவ வலிமையை அடைவதற்காக அலைய விடுவதுதான்” என்ற தவறான நம்பிக்கையை முதலும் கடைசியுமாக இஸ்லாம் தான் தகர்த்தெறிந்தது.காடுகளிலும், குகைகளிலும், மடாயலயங்களிலும் அமர்ந்து பசித்திருப்பது, விழித்திருப்பது, உணர்வுகளை அடக்குவது போன்ற தவங்களை தனித்த இடங்களில் செய்வதைவிட மக்கள் மத்தியில் அன்றாடப் பிரச்சினைகளுக்கிடையில் செய்து காட்டுவதுதான் உண்மையான, வல்லமையான தவம் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஏனெனில் சோற்றுக்கே வழியில்லாமல் ஒருவன் எளிமையாக இருக்கிறேன் என்று கூறுவதைவிட எல்லா வசதியும் படைத்த ஒருவன் எளிமையாக இருப்பதுதான் உண்மையான எளிமை என்பதில் ஐயமில்லை.அதே சமயத்தில் இஸ்லாம் மனிதனை காலம் முழுவதும் பட்டினி கிடக்கவேண்டுமென்றோ திருமணத்தை வெறுத்து துறவறத்தை ஏற்று கொள்ளவேண்டுமென்றோ, பாசத்திற்கும், அன்புக்கும் விடைகொடுக்க வேண்டுமென்றோ  சொல்லவில்லை. மாறாக நடுநிலையான ஒரு வாழ்க்கையை கடைபிடிக்கச் சொல்கிறது. இறைவன் தன் திருமறையில் முஸ்லிம் சமுதாயத்தை “உம்மதுன்வஸத்” நடுநிலை சமுதாயம் என்றே குறிப்பிடுகின்றான்.இறைவன் நம்மீது விதித்திருக்கின்ற நோன்பும் இஸ்லாத்தின் தனிப்பெரும் அம்சமாக திகழ்கிறது். ஏனெனில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அளவுக்கு உணவு உண்ணுவதை தடுத்திருப்பது போல் ஒரேயடியாக பட்டினி கிடப்பதையும் கண்டித்துள்ளார்கள்.மேலும் நோன்பு என்பது பட்டினி கிடந்து உண்ணாமல், பருகாமல் காலையிலிருந்து மாலை வரை இருப்பது மட்டுமல்ல.  மாறாக இறைவனுக்காக நாம் ஆற்றவேண்டிய பல்வேறு தியாகங்களில் அந்த இரண்டும் இடம் பெறுகின்றன. ஏனெனில் ஹலாலான மனைவியைப் பெற்றிருந்தும் அவளை அணுகாதிருப்பது, ஒரு பொய் கூறினால் பல கோடி லாபம் கிடைக்கும் என்று தெரிந்திருந்தும் பொய் பேசாதிருப்பது,கோபம் ஆத்திரம் பீறிட்டெழுந்தாலும் அடக்கிக் கொணடு தவறான செயல்களை செய்யாதிருப்பது போன்ற பல ஒழுக்க முறைகளைக் கைவிடும் போது அது நோன்பாக இறைவனால் ஏற்கப்படாது”. எவர் பொய்யான சொற்களையும், அதன் மீது செயல் புரிவதையும் மடத்தனமான செயல் புரிவதையும் விடவில்லையோ அவர் உண்ணாமல் பருகாமல் இருப்பதினால் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை என்பது நபி மொழி.நோன்பின் நோக்கம் மனிதனை புடம் போட்ட தங்கமாக, உள்ளஉறுதி மிக்கவனாக, இறையச்சமுடையவனாக மாற்றுவதுதான் என்பது தெளிவாகின்றது. இன்னும் சொல்லப் போனால் சத்தியப்பாதையில் ஜிஹாத் செய்வதற்கு அவனைத் தயார் செய்கின்ற ஒரு பயிற்சி என்றுகூட கூறலாம்.ஏனைய வணக்க வழிபாடுகளான தொழுகை, ஜகாத், ஹஜ், ஜிஹாத் முதலியவை பிறருக்கும் தெரிந்திருக்கக் கூடிய வகையில்அமைந்துள்ளன. ஆனால் நோன்பு,நோற்பவனுக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாகும். ஒருவன் யாருக்கும் தெரியாமல் ஒரு வாய் உணவு சாப்பிட்டு விடலாம். தாகம் பொறுக்க முடியாமல் ஒரு மிடறுதண்ணீர் குடித்து விடலாம்.ஒருவரும் கண்டுபிடித்து விட போவதில்லை. இருந்த போதிலும் ஒரு உண்மையான அடியான் அவ்வாறு செய்வதில்லை. ஏனெனில் இறையச்சம் முழுமையாக அவன் உள்ளத்தை ஆட்சி செய்கின்றது.இதைத்தான் ஆரம்பத்தில் நாம் எடுத்து வைத்த இறை வசனம் நமக்கு தெளவாக்குகின்றது மனிதனைப் பக்குவபடுத்துகின்ற பெருநோக்கிக்கிற்காக கடமையாக்கப்பட்ட நோன்புக்கு எந்த காரணங்களையும் கற்பிக்க உரிமை இல்லை. வருடத்தில் பதினொரு மாதங்கள் நன்றாக உணவு உடகொள்கின்ற நாம், ஒரு மாதம் நோன்பு நோற்பதால் உடல் உறுப்புகள் புத்துணர்வும், குடல் சுத்தமும் பெறுகின்றது என்று காரணம் கூறும் சிலர், கேட்க இனிமையாக இருந்தாலும், அல்லாவின் நோக்கம் அதுவன்று. எனவே, தான் இறைவன் கூறியதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.மனிதனுடைய ஒவ்வொரு செயலும் இறைவனிடத்தில் பல மடங்கு பெருகுகின்றது. ஒரு நன்மை பத்து மடங்கிலிருந்து எழுபது மடங்கு வரை அதிகரிக்கின்றது. ஆனால் நோன்பு இதற்கு விதிவிலக்காகும்.  அது எனக்கே உரியது. நான் விரும்பும் அளவு அதற்கு கூலி கொடுப்பேன்.”                                           (ஆதாரம்: புகாரி)நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவை———————————-நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பலமுறை பல்துலக்கிக் கொண்டிருக்க நான் கண்டுள்ளேன்.          அறிவிப்பவர்: ஆமிர் இப்னு ராபிஆ   ஆதார நூல்கள்: அபூதாவூது, திர்மிதிநபிகள் நாயகம் (ஸல்) நோன்பு நோற்றிருந்த போது, தாகத்தின் தாரணமாகவோ, அல்லது கடும் வெப்பத்தின் காரணமாகவோ தங்கள் தலை மீது தண்ணீரை ஊற்றிக்கொண்ருந்ததை “அர்ஜ்” என்ற இடத்தில் வைத்து நான் பார்த்தேன்.அறிவிப்பவர்: மாலிக் (ரழி) ஆதார நூல்: பூதாவூதுநோன்பு நோற்றிருப்பவர் (தான் நோன்பாளி என்பதை மறந்த நிலையில்) உண்ணவோ, பருகவோ செய்துவிட்டால் (நோன்பு முறிந்து விட்டது என்று எண்ண வேண்டாம்) மாறாக அந்த நோன்பையே முழுமைப் படுத்தட்டும். ஏனெனில் அவனை அல்லாஹ் உண்ணவும், பருகவும் செய்திருக்கின்றான். அறிவிப்பவர்: அபூஹுரைரா  ஆதார நூல்: புகாரி, முஸ்லிம்அல்லாஹ் நம் அனைவரையும் இத்தகைய பெறும் பேறு பெற்றவர்களீல் சேர்ப்பானாக.




Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

“தர்கா” ஜியாரத் ! வழிகெடு !!


எல்லாப் புகழும் இறைவனுக்கே! அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே!
இன்றைய கால கட்டத்தில் இஸ்லாம் மார்க்கம் மக்களிடையே பரவாமல் தடுப்பதென்ற முடிவுடன் பலவித உத்திகளைக் கொண்டு அவப்பெயர் களையும், முஸ்லிம்களை மாத்திரம் தீவிரவாதத்தை உடையவர்களென பொய்ப் பிரச்சாரங்கள், பிட் நோட்டீஸ்கள் இன்னும் பிற முயற்சிகள் மேற்கொண்டாலும், இஸ்லாம் மார்க்கம் மேலும் மேலும் பரவி சத்தியத்தை நிலை நிறுத்துவதைக் காணலாம்.சத்தியம் அறியாத மக்களிடையே பரவினாலும், இந்த சத்திய மார்க்கத்தில் ஒவ்வொருவரும் நன்மையை ஏவி தீமையை தடுத்து சிறந்த சமுதாய முன்னோடிகளாக திகழக் கூடிய முஸ்லிம்களை ஷைத்தானின் சூழ்ச்சியில் சிக்கி கற்றவர்கள் எனக் கூறிக் கொள்ளும் உலமாக்கள், மெளலவிகள் தங்களின் தவறான பிரச்சாரத்தின் மூலம் ”தர்கா” என்று சொல்லக் கூடிய சமாதிகளின் மீது அடிமைப்பட்டுக் கிடக்க வைத்துள்ளனர். இந்த அடிமைத்தனம் இன்று நேற்றல்ல நூஹு(அலை) அவர்களின் காலத்திலிருந்தே இருந்து வருகிறது.
படைத்த இறைவனை மறந்து, தத்தமது சமூகங்களுக்கு நபியாக அனுப்பப்பட்ட நபியின் வழிமுறைகளை (சுன்னத்துகளை) மறந்து, இறைவனால் தூக்கியெறியப்பட்ட ஷைத்தானின் சூழ்ச்சியாலும், தத்தமது மன இச்சைகளைப் பின்பற்றியும் இறைவன் எதை மன்னிக்கவே மாட்டானோ அந்த இணை வைத்தலை செய்து வருகின்றனர்.
இவர்கள் செய்யக்கூடிய செயல்கள் தவறானது என்று நாம் கூறினோம் என்றால், அவர்கள் அளிக்கக் கூடிய பதில் “”உடம்பு சரியில்லையென்றால் டாக்டரிடம் காட்டுகின்றோம்; அவர் குணப்படுத்துகின்றார்; நாம் ஒரு முதலமைச்சரை சில காரணங்களுக்காக சந்திப்பது என்றால் நம்மால் இயலாது. அதற்கு நமக்கு தெரிந்த ஒரு M.L.A., M.P. ஐ
யா தான் நமக்கு சிபாரிசு பண்ணக் கூடியவர் என்று நம்புகின்றோம்; செயல்படுத்துகின்றோம். நாமெல்லாம் பெரும் பாவம் பண்ணி இறைவனின் கோபத்திக்கு ஆளாகியுள்ளோம். எனவே நாம் பாவத்தை மன்னிப்பதற்கும் மறுமையில் சிபாரிசு பண்ணுவதற்கும் வக்கீலாகவே அவ்லியாக்களிடம் வேண்டுகிறோம் என்று கூறுவதைக் காணலாம்.
இவர்களுக்கு இறைவன் கூறக் கூடிய பதில் என்ன? தத்தமது நாயகர்களாக நினைக் கூடியவர்களிடத்தில் நடக்கும் அனாச்சாரங்கள் என்ன? என்பதை பற்றிப் பார்ப்போம்.
“தர்கா” என்பது மார்க்கப் பெரியார்களின் பெயரால் கட்டப்பட்டுள்ள கபுரடிகளாகும். இச்சமாதிகளின் மூலம் வழிகெடுவதுமல்லாமல், பலவித அனாச்சாரங்களைப் புரிவதையும் காணலாம். இது மட்டுமில்லாமல் இறந்துபோய் கபுரில் அடக்கப்பட்டவர்களை அவமானப்படுத்துவதையும் காணலாம். ஏன் இந்த நிலையென்றால் – இறந்துபோன பெரியவர்கள் மூலம் தமது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகின்றன என்ற தீய எண்ணத்தை தவறான பிரச்சாரத்தின் மூலம் மனதில் நிறுத்தி வைத்திருப்பதே முக்கிய காரணமாகும். அவ்லியாக்கள் எனப்படுவோர் யார்? அவர்களின் தகுதிகளாக இறைவன் குறிப்பிடுவது எவற்றை? அவ்லியாக்களை எவர் அறிய இயலும்? இன்னார்தான் அவ்லியா என்பதற்கு என்ன அத்தாட்சி? இறைநேசகர்கள் யார் என்றால், இறைவனை ஏற்று, இறைவனால் அனுப்பப்பட்ட நபியைப் பின்பற்றி, நன்மை தீமைகளை மக்களிடம் எடுத்துரைக்கக் கூடிய மூஃமின்கள் அனைவரும் இறைநேசகர்கள் தான். இதை இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான்(தயவு செய்து பார்க்கவும்) 2:195;2:2222;3:76;3:146,148,159;5:13;5:42;5:93;9:4-7,108;10:62,63; 49:9;60:8;61:4
மேற்குறிப்பிட்ட வசனங்களின் வாயிலாகவே இறைநேசகர்களின் அடையாளங்களையும், தகுதிகளையும் குறிப்பிடுகின்றான்.
தர்காவில் அடங்கி இருக்கும் இந்த இறை நேசர்களெல்லாம் தூய இஸ்லாத்தைப் பரப்ப வேண்டும் என்ற நன்நோக்கில் ஊரைவிட்டு, தாம் பிறந்த நாட்டை விட்டு, மனைவி மக்களையெல்லாம் விட்டு சத்தியத்தை எடுத்துரைக்கும் பொருட்டு ஹிஜ்ரத் புரிந்து, மார்க்கத்தை எடுத்துரைத்த இவர்களை இவர்களின் இறப்புக்குப் பின் அவர்களின் கபுரின் மேலாக கட்டிடம் எழுப்பி, அதற்கு வெள்ளையடித்து, பூமாலை, பூக்கள் தூவி அந்த கபுருக்கருகில் பச்சை நிற தலைப் பாகையுடன் ஒருவர் கையில் மயிலிற குடன் அமந்து கொண்டு அங்கு வருவோர் போவோரிடம் அவ்லியா சக்திமிக்கவர் பலவிதநோய்களைத் தீர்க்கக் கூடியவர், பல கராமத்களை உடையவர் என்று கூறி இன்ன அவ்லியாவுக்கு பாத்திஹா ஓதுங்கள் எனக்கூறி, தமக்குத் தெரிந்த அரைகுறையான அரபி வார்த்தைகளை முனுமுனுத்து அதைக் கொண்டு வயிறு வளர்ப்பதைக் காணலாம்.
அங்கு வரக்கூடிய மக்கள் இன்ன அவ்லியாவிடம் வேண்டிக் கொண்டால் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தைக் கிடைக்கும். நோய் தீரும் என்று நம்பி வந்து தங்களது ஈமானை இழக்கின்றனர். இந்த மக்கள் என்றாவது சிந்தித்துப் பார்த்திருப்பார்களா? இறைவனை நம்ப மறுத்து, அதற்கு இணையாக வணங்கும் கற்களை நோக்கி, மாரியம்மா, காளியம்மா , மூலியம்மா என்றழைக்கக்கூடிய காஃபிர்களும் கூட கற்களை வணங்குவதால் அவர்களுக்கும் நோய் தீர்ந்து விடுகின்றது. குழந்தை பிறக்கின்றது. இன்னும் பல தேவைகளும் பூர்த்தியாகின்றன. இதை வைத்து அவர்கள் வணங்க கூடிய கற்களை அவ்லியாக்களாக தங்களது பாதுகாவலர்களாக ஏற்றுக் கொள்வார்களா? சிந்திக்கவும். மேலும் நிராகரிப்பவர்கள் செய்யக்கூடிய செயல்களை யெல்லாம், முஸ்லிம் என்ற லேபிளில் செய்வதைக் காணலாம்.
அவர்கள் தத்தமது தெய்வங்களுக்கு வணங்க சூடம், சாம்பிராணி, பத்தி கொளுத்துவது போன்று, நம்மவர்களும் அவ்லியாக்களின் சமாதிகளுக்கு பூச்சூடி, பத்தி கொளுத்தி வருவதைக் காணலாம். அவர்களிடத்தில் விளக்கு ஏற்றி இறுதியில் பிரசாதம் என்ற பெயரில் சாம்பலை அளிக்கின்றார்கள். நம்மவர்களிடத்தில் துவாரஜகோஜனம் என்னும் பெயரில் பத்தி, நாட்டுச் சர்க்கரை, பூ எல்லாம் கலந்த கலவையாக அளிப்பதையும், அதை வாங்கி பக்தி சிரத்தையுடன் உண்பதற்கும், கூட்டம் அடித்து பிடித்து அலைமோதுவதையும் காணலாம். அவர்கள் ஊர் கூடி பால்குடம், தீர்த்தக் குடம் எடுத்தால், நம்மவர்கள் சந்தனக் குடம் எடுத்து விமரிசையாக கொண்டாட்டம் போடுவதைக் காணலாம். இதுபோன்ற பல உதாரணங்களை நாம் எடுத்துரைக்கலாம். இன்னும் இந்த அவ்லியாக்களுக்கு பல பாத்திஹாக்கள் ஓதுவதைக் காணலாம். பாத்திஹா ஓதுவதால் பரக்கத் ,செல்வம், சிறப்பு என்று பல கிடைக்கின்றன என்றால்,பாத்திஹா ஓத வைக்கக் கூடிய உங்களுக்கு இது போன்றவை கிடைக்கும் எனில்…. ஓதக் கூடிய பச்சை தலைப்பாகை பண்டாரங்களுக்கு எவ்வளவு கிடைக்க வேண்டும்? அதுவும் நீங்கள் பயணம் செய்து அவ்லியாக்களுக்கு பாத்திஹா ஓதுகிறீர்கள். அவ்லியாவுக்கு பக்கத்திலேயே காலம் பூரா அமர்ந்து இந்த செயல்களை செய்கின்ற இந்த பண்டாரங்கள் உங்களோட கைகளை எதிர்பார்த்து ரூ.5,10க்கு ஆசைப்படுவது எதைக் காட்டுகின்றது?
அங்கிருக்கக் கூடியவர்களுக்கே ஒன்றும் இல்லை….ஆனால் உங்களுக்கு மட்டும் பரக்கத் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுவதை எப்படி எதிர்பார்க்க இயலும்? அதுவும் அவ்லியாவின் மேலே அவர்களுக்கே நம்பிக்கையில்லை. தத்தமது உணவு பிரச்சினை தீர்க்க உண்டியல் நடப்பட்டு, அதில் விழக்கூடிய காசுகளை எதிர்பார்ப்பது எதைக் காட்டுகின்றது? சிந்திக்கவும். இங்கு ஓதக் கூடிய பாத்திஹாக்களுக்குப் பின் கொடுக்கப்படும் நார்சா மிக சிறப்பாக கண்ணியப்படுத்தப்படுகின்றது. பக்தி சிரத்தையுடன் பெற்று தமது சொந்தக்காரர்களுக்கு உறவினர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இதை சாப்பிடுவதால் பலா முஸீபத்துகள் (நோய் நொடிகள்) வெருண்டோடுவதாகவும் நம்பிக் கொள்கின்றனர். கடையில் இருக்கும் சர்க்கரை, பூ, கல்கண்டு இவைகளுக்கு இருக்கும் இடத்தில் மதிப்பு இல்லை. ஆனால் இது நார்சாவாக உருவெடுத்தால், இவைகளின் மீது அவ்லியாவின் பரக்கத் இறங்கியுள்ளதாக எண்ணுவது எந்த அளவு அறியாமை?
மேலும் இந்த அவ்லியாக்களால் நோய்களையும், பேய்(?)களையும் குணப்படுத்த இயலும் என்று நம்பச் செய்து பேய்(?) பிடித்து இருப்பவர்களை அழைத்து வந்து அவர்களை அங்கு தங்கச் செய்து, பல சித்திரவதைகள் புரிந்து மனநிலை சரியில்லாத்வர்களை குற்றுயிரும், குலையுயிருமாக வெளிக் கொண்டு வருவதையும் காணலாம்.
இறந்தவர்கள் பேயாக வருவதில்லை:
ஒரு மனிதரோ, பெண்ணோ மன அழுத்தத்தின் காரணமாக மன வியாதிக்கு ஆட்பட்டால் அவர்களையெல்லாம் பேய் பிடித்து உள்ளவர் என்று கூறி தர்காக்களில் சங்கிலிகளால் பிணைத்து அவர்களை அடித்து, உதைத்து சித்திரவதைப்படுத்தி தன் வயிறுகளை வளர்க்க மிரட்டி இன்ன இன்ன  பொருள்களை தொடுத்தால் இன்னாரை விட்டு விலகி விடுகின்றேன் எனச் சொல்லச் செய்து, அதே போன்று பொருட்களைப் பெற்று – தர்ம அடிகளை பரிசாகக் கொடுத்து, சுரண்டுவதில் குளிர்காய்கின்றனர்.
மனநிலை சரியில்லாதவர்களை அவ்லியாக்களிடத்தில் சென்றுதான் குணப்படுத்த வேண்டும் என்பதில்லை. இறைவனின் மீது தவக்கல் வைத்து சிறந்த மனநல மருத்துவரை நாடி சிகிட்சை பெற்றாலே போதும். ஆனால் உளறல் பிதற்றல் ஓடுவது, சப்தமிடுவது ஆகிய அனைத்தும் விரோதி சைத்தானின் தூண்டலே. பிறந்த குழந்தை மீண்டும் தாயின் கர்ப்பப்பையில் எப்படி நுழைய முடியாதோ, கறந்த பால் மீண்டும் எப்படி மடிபுகாதோ அதே போல் இறந்தவர்களின் ஆன்மா மீண்டும் இவ்வுலகம் வர முடியாது. 39:42 இறைவாக்கின்படி இறப்பில் கைப்பற்றப்பட்ட ஆன்மா மீண்டும் இவ்வுலகிற்கு வரவே முடியாது. இப்படி இருக்கையில் இறந்த ஒருவரின் ஆன்மா மற்றொருவதை சார்வது எப்படி சாத்தியமாகும்? சிந்திக்கவும்!
“கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களையும் அவற்றில் பள்ளிகள் கட்டுபரைவுயும் விளக்கேற்றுபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தனர்.”  ஆதாரம்: அபூஹுரைரா(ரழி), நூல்: ஸுனன்.
மேற்காணும் ஹதீஸுக்கு மாறாக பெண்கள் சாரைசாரையாக கபுருக்கு செல்வதையும் விளக்கேற்றுவதையும் கப்ரின் மேலே கட்டம் கட்டப்பட்டுள்ளதையும் காணலாம். இச்செயல்கள் மிக வேதனைக் குரியதாக உள்ளன. நபி(ஸல்) அவர்களை நேசிப்பதகாவும், உயிருக்கு மேலானவர்கள் என்று எண்ணக்கூடியவர்கள் கீழ்வரும் ஹதீஸை கவனிக்கவும். நபியின் மகளார் பத்திமா(ரழி)க்கே கப்ருக்கு சென்றால் கடுந்தண்டனை கிடைக்கும் என்பதை காணலாம்.
நபி(ஸல்) அவர்களோடு சென்று நாங்கள் ஓர் மைய்யத்தை அடக்கம் செய்த பின் அவர்களோடு அந்த இறந்தவரின் வீட்டின் பக்கம் திரும்பி வரும் போது எதிர்பாரா வண்ணம் ஒரு பெண் முன்னாலிருந்து வருவதை நபி(ஸல்) கண்டுவிட்டனர். அப்பெண் எவர் என்பதை நபி(ஸல்) அவர்கள் அறிந்து கொண்டார்கள் என்று நான் எண்ணிணேன். அவர் பாத்திமா(ரழி) அவர்கள் தாம்! எனவே நபி(ஸல்) அவர்கள் (தம் அருமை மகளாரை நோக்கி)” உம்முடைய வீட்டிலிருந்து எக்காரணம் கொண்டு வெளி வந்தீர்! என்று வினவினார்கள்; அதற்கு பாத்திமா(ரழி) அவர்கள், இறந்தவரின் குடும்பத்தினரிடம் சென்று அவர்களுடைய இறந்த உறவினருக்கு இறையருளைக் கேட்டுவிட்டு அவர்களுக்கும் அனுதாபம் கூறிவிட்டு வருகிறேன் என்று கூறினார்கள். (அது கேட்ட) நபி(ஸல்) அவர்கள் நீர் அவர்களுடன் அவரின் அடக்க இடத்திற்கு சென்றீரா? என்று வினவ (அதற்கு) பாத்திமா(ரழி) அல்லாஹ் என்னை காத்தருள்வானா! நிச்சயமாக தாங்கள் இதுபற்றி (கூடாது என்று) கூறி வந்ததை நான் செவியுற்றேன்”என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் நீர் அவர்களோடு (அவரின்) அடக்கதலத்திற்கு சென்றிருப்பீராயின் அதன் காரணமாக உமக்கு கடும் வேதனையுண்டு என்று கூறி “”உன் தந்தையின் பாட்டன் சொர்க்கம் செல்லும் வரை நீயும் செல்ல முடியாது” என்று கூறினார்கள்.
ஆதாரம்: இப்னு அம்ருப்னுல் ஆஸ்(ரழி), நூல்: அபூதாவூத், நஸயீ.
மேற்கண்ட ஹதீஸின் வாயிலாக பெண்கள் கப்ருக்குளுக்குச் சென்றால் கடுந்தண்டனை உண்டு என்பதை உணரலாம். இது மாத்திரம் அல்லாமல் தர்காக்களில் தட்டு, தாயத்துகள் விற்கப்படுகின்றன. இதைக் கொண்டு (செப்புத் தகட்டில்) ஏதோ சில அரபி வாசகங்களை எழுதி தத்தமது வீடுகளின் முகப்பில் பிரேமிட்டு மாட்டி விட்டால் முஸீபத்துகள், கெட்ட செயல்களெல்லாம் விலகிவிடும் என்றும், தாயத்துகள் அணிந்து கொண்டால் பேய்கள், ஆவிகள், பயம் ஆகியவற்றி லெல்லாம் இருந்து விலகிக் கொள்ளலாம் என்று விற்பனை செய்கின்றனர். இதை நம்பி வாங்கக் கூடிய மக்கள் இந்த தகடு, தாயத்துகள் மீது மிகுந்த மரியாதை செலுத்துவதையும் காண்கின்றோம். இந்தப் செப்புத் தகட்டிற்கு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பத்தி, சாம்பிராணி போடப்பட்டடு மிக பக்தி சிரத்தையுடன் பாதுகாக்கின்றனர். ஆனால் இதற்கு அளிக்கக்கூடிய சிரத்தையை குர்ஆனுக்கு அளிக்கின்றார்கள்? என்பதை பார்த்தோமானால் நிச்சயம் இல்லையென்றே சொல்லலாம்.
குர்ஆனை பக்குவமாக பட்டுத்துணியெடுத்து அதை உறையாக தைத்து உயரமான இடத்தில் வைத்து விடுகின்றனர்; ஒரு சிறைக் கைதியைப் போல. ஏனெனில் சிறையில் இருக்கக்கூடிய ஒருவன் தான் பரோலில் வெளியே வந்து, பரோலின் காலம் முடிந்த பின் மீண்டும் சிறைக்கு செல்வானோ, அதுபோல குர்ஆனை உயரமான இடத்தில் வைத்து விட்டு, வீடுகளில் எவரேனும் இறந்து, இறந்தவர்களுக்கு -3ம் பாத்திஹா, 7ம் பாத்திஹா, 40ம் பாத்திஹா என்ற நிலைக்கு மாத்திரம் குர்ஆனை கையிலெடுத்து அரபி வாசகங்களை ஓதிவிட்டு, மீண்டும் இருந்த இடத்திலேயே வைக்கின்றார்கள். இறைவன் “”குர்ஆன்”க்கு மாத்திரம் பேசக் கூடிய சக்தியை அளிதிருப்பானாயின் குர்ஆன் இறைவனிடத்தில் பிரார்த்திக்கும் “”யா இறைவா இன்னார் வீட்டில் தொடர்ந்து மரணத்தை அளிப்பாயாக”, ”அப்பொழுதுதான் என்னைக் கையிலெடுத்து ஓதுகின்றார்கள் ” அந்த சந்தர்பத்திலாவது எனக்கு விடுதலை கிடைக்கின்றதாகப் பிரார்த்திக்கும்.
-குர்ஆனைப் பற்றி இறைவன் தன் திருமறையில் இந்த குர்ஆனை நன்கு நினைவுப்படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (அல்குர்ஆன் 54:40)
இதற்கு மாற்றமான முறையிலேயே பயன் படுத்துவதைக் காணலாம். மேலும் தாயத்துகளை அணிவதை ஹதீஸ் தடை செய்கின்றது. இதுமட்டுமல்ல சந்தனக்கூடு – உரூஸ் என்ற பெயரில் பல அனாச்சாரங்களும் நடக்கின்றன.
சந்தனக்கூடு – உரூஸ் அன்று விசே­பாத்திஹாக்கள் ஓதப்பட்டு, சந்தனம் ஊற்றப்பட்டுள்ள சந்தனக் குடத்தை ஊர்வழியாக ஊர்வலம் சென்று அவ்லியாக்களின் சமாதிகளில் பூச, விழா ஏற்படுத்தி அந்த விழாவில் கூட்டங்கள் அலைமோ, ஆண், பெண் இருபாலரும் கூட்டத்தின் நெரிசலில் இடித்து, கெட்ட செயல்களையெல்லாம் புரிந்து அனாச்சாரங்களை நிறைவேற்றும் இடங்களாக அவ்லியாக்களின் சமாதிகளுகும், அடக்க ஸ்தலங்களும் பயன்படுகின்றன.
இந்த உரூஸில் சிலம்பாட்டம், ஒலியாட்டம், குரங்காட்டம் போன்ற பல செயல்களை இஸ்லாத்திற்கு சம்பந்தமில்லாத முற்றிலும் மாற்று இனத்தவர்கள் புரியக் கூடிய செயல்களை இஸ்லாமிய திருவிழா போல நடத்துவதைக் காணலாம்.
இதுவும் அல்லாமல் பூக்குழி இறங்குதல் என்ற பெயரில் நெருப்பு மிதித்தல் என்ற நிகழச்சியையும் நடத்துகின்றனர். இந்த நிகழ்ச்சி எதன் வாயிலாக நடத்துகின்றனர். இந்த நிகழ்ச்சி எதன் வாயிலாக என்றால் தாங்கள் குடும்பத்தார்கள் படைத்த இறைவனை விட்டு தனது அடிமையிடம் தாங்களது பிரார்த்தனையை வேண்டி, அந்த பிரார்த்தனைகள் இறையருளால் பூரணம் ஆனால் – அது அந்த அவ்லியாவால் தான் நடந்தது என்று எண்ணி அந்த அவ்லியாவுக்கு நன்றிக் கடன் செலுத்துவதாக எண்ணி இந்த நெருப்புக் குழியில் இறங்கி, தங்களது நேரத்தையும், கால்களையும் புண்ணாக்கி கொண்டு, யா முஹைதீன், யா காஜா என்றெல்லாம் கூப்பாடுகளிட்டு அலறுவதில் எத்தகைய பயனும் இல்லை.
அந்த அவ்லியாவுக்கு நேர்ந்து முடி இறக்குவதும், ஆடு மாடு, கோழிகளை அறுத்து பலியிடுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.  மேலும் அந்த அவ்லியாக்களின் சமாதிகளில் விபச்சாரங்களும், சீட்டாட்டங்களும், மது விற்பனைகளும் நடப்பதை காண்கையில் நிச்சயமாக இந்த இடம் புனிதமானதாகவோ, பயணம் செய்யக்கூடிய இடங்களோ என்றால் நிச்சயமாக இல்லை. அதுவும் அவ்லியாக்களின் பெயரைக் கேட்டால் சிரிப்பு வரவழைக்கும் பெயர்களைக் காணலாம்.
பீர்அவ்லியா, சட்டி மஸ்தான், நெட்டைபாவா, சைதானீபீவி அவ்லியா என்றெல்லாம் அழைக்கப்பட்டு இந்த அவ்லியாக்களுக்கும் கராமத்துகள் உண்டென்று நம்ப வைத்து பணம் சுரண்டி உண்டு வருவதையும காணலாம். இதுபோன்ற பெயர்களில் எல்லாம் உள்ள அவ்லியாக்கள் நிச்சயமாக இறை நேசகர்களாக இருக்க முடியாது. ஏனெனில் எங்க ஊர் பக்கம் ஒரு கதை சொல்வாங்க.
(இக்கதை மார்க்கமல்ல)
ஓர் ஊரில் தகப்பனும், மகனும் வசித்தார்கள் அவர்கள் இருவரும் வேலை என்றாலே வேப்பங்காய் கசப்பை போன்றதாக எண்ணுபவர்கள். இந்நிலையில் ஊரார்கள் இவர்களின் நிலையைக் கண்டு அடித்து விரட்டவே, இவர்கள் தங்கள் உணவிற்காக அடுத்த ஊரை நோக்கிச் சென்றார்கள். செல்லும் போது தகப்பனுக்கு ஓர் எண்ணம்!
தன் மகனிடம் “”மகனே நீ பக்கத்து ஊருக்கு போ, நான் வேறு ஊருக்கு செல்லுகின்றேன்” என்று கூறி சென்று விடவே, மகன் பக்கத்து ஊருக்குச் சென்றான். பக்கத்து ஊரில் அவனுக்கு எவரும் உணவளிக்க மறுக்கவே, உட்கார்ந்த இடத்திலிருந்தே உண்ணவும், பணம் சம்பாதிக்கவும் எண்ணிய அவன், அவ்வழியே சென்ற ஒரு நொண்டிப் கழுதையினை அடித்து புதைத்து விட்டு, புதைத்த இடத்தில் மண் கோபுரம் எழுப்பி, அதற்கு பூஜைகளை செய்து வந்தான். அவ்வழியே வருவோர் போவாரிடம், இன்ன இடத்தில் மிகப் பெரிய மகான் ஒருவர் அடங்கி உள்ளார். இவருக்கு பல சக்திகள் உண்டு, நோய்களை தீர்ப்பார், பேய்களை விரட்டுவார் என்றெல்லாம் கூறவே, அதை நம்பிய மக்கள் தத்தமது தேவைகளை நிறைவேற அந்த மிகப் பெரிய(?) மகானிடம் வேண்ட அதுவும் ஏதோ காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக நிறைவேற, கூட்டம் கூடவே, மகானுக்கு தட்சணை என்ற பெயரில் மக்கள் பொருட்களையும், பணங்களையும் கொடுக்க அதை மகன் எடுத்து தம் வயிற்றுப் பசி நீக்கி, எஞ்சிய பொருட்களில் மிகப்பெரிய வீடுகட்டி வாழ, அதை அறிந்த தகப்பன் வந்து சேர்ந்து, மகனிடம் நீ எவ்வாறு இவ்வளவு பெரிய ஆளாக ஆனாய்? என்று வினவவே, அவன் “”கழுதை மிகப்பெரிய மகானான கதை” கூறினார். இந்த சிந்தனை எனக்கு வரவில்லை,என்று கூறி “மகனுடன் தகப்பனும் சேர்ந்து கொண்டான்”.
மேற்கண்ட கதையைப் போலவே தத்தமது வயிறுகளை வளர்க்க நம்மவர்கள் உருவாக்கிய பல சமாதிகளாக பல தர்காக்கள் கட்டி வைத்துக் கொண்டு மக்களிடம் சுரண்டி வருகின்றனர். மேற்கூறப்பட்ட செயல்களுக்கும், அவ்லியாவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. மேலும் இறைவனும், இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களும் காட்டி தந்த முறைதானா என்றாலும் இல்லை. மாறாக இறைவன் தன் திருமறையில், தன்னை விட்டு தன் அவ்லியாவிடம் கையேந்துபவர்களை நோக்கிக் கூறுகின்றான்.
“நிச்சயமாக அல்லாஹ்வையன்றி, எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ அவர்களும், உங்களைப் போன்ற அடிமைகளே! (உங்கள் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள் என்று கூறுவதில்) நீங்கள் உண்மை சொல்லுபவர்களாக இருந்தால், அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள், உங்களுக்கு அவர்கள் பதிலளிக்கட்டும்.” (அல்குர்ஆன் 7:194)
“”….அவர்களுக்கு கால்கள் இருக்கின்றனவா? அவைகளைக் கொண்டு நடக்கின்றார்களா? அவர்களுக்குக் கைகள் இருக்கின்றனவா; அவைகளை கொண்டு பிடிக்கின்றாரக்ளா? அவர்களுக்குக் கண்கள் இருக்கின்றனவா; அவைகளைக் கொண்டு பார்க்கின்றனரா? அவர்களுக்கு காதுகள் இருக்கின்றனவா; அவைகளைக் கொண்டு கேட்கின்றனரா? (அல்குர்ஆன் 7:195)
இறந்துவிட்ட அவ்லியாவுக்கு கால்கள் இருந்தும் நடந்து வர இயலாது. கைகள் இருந்தும் அதைக் கொண்டு எவ்வித செயல்களை செய்ய இயலாது. கண்கள் இருந்தும் எந்த ஒரு பொருளையும் பார்க்க இயலாது. காதுகள் இருந்தும், (கேட்கும் பிரார்த்தனைகளை) செவி சாய்த்து, பதில் கூறவோ சிபாரிசு பண்ணவோ இயலாது. மேலும் அவ்லியாக்களுக்கு நேர்ச்சை புரிந்து, ஆடு,கோழி, மாடுகளை அறுத்து பலியிடுகின்றனர். பலியிடுவது முழுவதும் அல்லாஹ்வுக்கே….
“” கால்நடைகளிலும், விவசாயத்திலும் (சிலவற்றைக் குறிப்பிட்டு நேர்ச்சைக்காக) இது தடுக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கொள்கைப்படி, நாங்கள் விரும்புகிற (புரோகிதர், அவ்லியா முதலிய) வர்களைத் தவிர, (மற்றெவரும்) அதனைப் புசிக்க கூடாது என்று அவர்கள் கூறுகின்றனர்.” (அல்குர்ஆன் 6:138)
அவ்லியாக்கள் எங்களுடைய கனவில் வந்து இன்ன தர்காவிற்கு வரச் சொன்னார். அதனால் போகின்றோம் எனக் கூறி தர்காக்களுக்கு செல்லுபவர்களுக்கென அல்லாஹ் கூறுகின்றான்.
“”(நபியே!) இவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களைத் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? (அவ்வாறாயின் அவர்களை நோக்கி) என்னுடன் இருப்பவர்களின் வேதமும், (அதவாது, குர்ஆன் இன்ஜில், தவ்றாத்) இதோ இருக்கின்றன.(அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதற்கு) உங்களுடைய அத்தாட்சியை நீங்கள் கொண்டு வாருங்கள்” என்று கூறும். எனினும் அவர்களில் பெரும்பாலோர் உண்மையை அறிந்து கொள்ளாமல் புறக்கணிக்கின்றனர். (அல்குர்ஆன் 21:24)
மேற்கூறப்பட்ட வசனத்திலிருந்து அவ்லியாக்களை வணங்குவ தற்கும், நேர்ச்சை புரிவதற்கும் எந்தவித அத்தாட்சியையும் இறைவனு டைய வேதத்திலிருந்தும் நபி(ஸல்) அவர்களின் வழிமுறையிலிருந்து எவரும் கொடுக்க முடியாது என்பதை உணரலாம்.
எனவே இறைவனுடைய வாக்கான “”இணைவைத்தலை மண்ணிக்கவே மாட்டேன் ” என்பதற்கிணங்க நாமும் நம் பின்வரும் சந்ததிகளும் இதுபோன்ற விலக்கப்பட்ட செயல்களை விட்டு விலகி, நன்மையை ஏவி தீமையை தடுத்து ரஸூல்(ஸல்) காட்டி தந்த முறையை செயல்படுத்த நம்மீது இறைவன் அருள்புரிவானாக!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
சுபிட்சமும் உயர்வும் உடைய நம் இறைவன் ஒவ்வோர் இரவும் கீழ் வானிற்கு இறங்கி இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி இருக்கும்போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரின் பிரார்த்தனையைநான் அங்கிகரிக்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறிகிறான். 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

நோன்புக்கும் குர்ஆனும் அடியானுக்காக மறுமையில் சிபாரிசு செய்யும். யா அல்லாஹ்! நான் இவரை உணவை விட்டும் இச்சையை விட்டும் தடுத்துவிட்டேன்! எனவே அவருக்கான என்னுடைய பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக! என்று நோன்பு கூறும். யா அல்லாஹ்! நான் அவரைத் தூக்கத்தை விட்டும் தடுத்துவிட்டேன். எனவே அவருடக்கான என்னுடைய பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வாயாக! என்று குர்ஆன் கூறும். அப்போது உங்கள் இருவரின் பரிந்துரைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன என்று அல்லாஹ் கூறுவான்.

'எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் இடைவெளியிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் உதவப்பட்டுள்ளேன். பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (இருக்கும் இடத்தில்) தொழுதுகொள்ளட்டும்! போரில் கிடைக்கிற பொருள்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்பு ஹலாலாக்கப்பட்டதில்லை. (மறுமையில்) சிபாரிசு செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன். ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பட்டார்கள். ஆனால், மனித இனம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். 



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

பிரார்த்தனை


யா அல்லாஹ்! எனது தீனிலும் துன்யாவிலும், குடும்பத்திலும், பொருளிலும் மன்னிப்பையும் ஆரோக்கியத்தையும் தந்தருள உன்னை வேண்டுகிறேன். யா அல்லாஹ் எனது வெட்கத்தலங்களை மறைத்தருள்வாளாக! எனது பயங்களை விட்டும் என்னை நிர்ப்பயமான வனாக்குவாயாக! எனது முன்புறம் பின்புறம், வலப்புறம், இடப்புறம், மேல்புறம் கீழ்ப்புறம் எல்லா திசைகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக! எனது கீழ்பாகத்திலிருந்து நான் தாக்கப்படுவதை விட்டும் உன் வலுப்பத்தைக் கொண்டு காவல் தேடுகிறேன்.

யா அல்லாஹ்! எனது உடலிலும், கேள்வியிலும் பார்வையிலும் ஆரோக்கியத்தைத் தந்தருள்வாயாக. வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. இறை நிராகரிப்பு, ஏழ்மை, மண்ணறை வேதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் காவல் தேடுகிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை.

யா அல்லாஹ்! நீயே என்னைப் படைத்து பரிபாலிப்பவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உனது அடிமை. என்னால் இயன்றவரை உனக்களித்த வாக்குறுதியையும், உன்னுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தையும் நிறைவேற்றக் கூடியவனாக இருக்கிறேன். நான் செய்த தீங்கிலிருந்து உன்னிடம் காவல் தேடுகிறேன்.எனக்கு சகல சௌபாக்கியங்களையும் அருளினாய் என நான் ஒப்புக் கொள்கிறேன். என் பாவத்தையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். எனவே எனது பாவத்தை மன்னித்தருள்வாயாக. பாவங்களை மன்னிப்பவன் உன்னைத் தவிர யாரும் இல்லை. இயலாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், முதலியவற்றிலிருந்தும், கடன் அதிகரிப்பதை விட்டும், மனிதர்கள் ஆதிக்கத்தை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன்.

யா அல்லாஹ்! இன்றைய தினத்தின் ஆரம்பத்தை நலவானதாகவும், பகுதியை வெற்றியானதாகவும், இறுதியை ஜெயமானதாகவும் ஆக்கியருள்வாயாக. ஈருலகிலும் நல்லவற்றைத் தருவாயாக. மரணத்திற்குப்பின் நல்வாழ்வையும். சங்கைக் குரிய உன் திருமுகத்தைக் கண்டு மகிழும் பாக்கியத்தையும், எவ்வித தங்கடங்கள் குழப்பங்களின்றி உன்னைச் சந்திக்கும் பெரும் பேற்றையும் தந்தருள உன்னை வேண்டுகிறேன்.

யா அல்லாஹ்! நான் பிறருக்கு அநீதி இழைப்பதிலிருந்தும், பிறரால் அநீதி இழைக்கப் படுவதிலிருந்தும், பிறரை நான் தாக்குவதிலிருந்தும், பிறர் என்னைத் தாக்குவதிலிருந்தும், தவறைச் சம்பாதிப்பதிலிருந்தும், மன்னிக்கப்படாத பாவத்திலிருந்தும் உன்னிடம் காவல் தேடுகிறேன்.யா அல்லாஹ்! சோதனையான முதுமையை விட்டும், உன்னிடம் காவல் தேடுகிறேன். நற்குணங்களின் பக்கம் எனக்கு வழிகாட்டுவாயாயக. அவற்றில் நல்லவற்றைக் காண்பிப்பவன் உன்னைத் தவிர யாருமில்லை. தவறான செயல்கள், தவறான குணங்களை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக. தவறுகளை விட்டும் காப்பாற்றக் கூடியவன் உன்னைத் தவிர யாருமில்லை.

யா அல்லாஹ்! எனது மார்க்கத்தைச் சீர்ப்படுத்துவாயாக. எனது இருப்பிடத்தை விசாலப் படுத்துவாயாயக. எனது ரிஜ்கில் பரக்கத்தை ஏற்படுத்துவாயாக. முரட்டுத்தனம், பொடுபோக்கு, இழிவு முதலிய கெட்ட குணங்களை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக.

யா அல்லாஹ்! செவிடு, ஊமை, குஷ்டம், கொடு நோய், முதலியவற்றை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன். எனக்கு இறையச்சத்தைத் தந்து என்னைத் தூய்மைப் படுத்துவாயாக. தூய்மைப்படுத்துபவர்களில் நீயே சிறந்தவன். நீயே எனது அதிபதி.

யா அல்லாஹ்! பயனற்ற கல்வி, பயமற்ற உள்ளம், நிறவைடையா மனம், ஏற்றுக் கொள்ளப்படாத பிரார்த்தனை, ஆகியவற்றிலிருந்தும், நான் செய்த தீங்கு, செய்யாத தீங்கு, நான் அறிற்து செய்த பிழைகள், அறியாமல் செய்த பிழைகள், அனைத்திலிருந்தும் உன்னிடம் காவல் தேடுகிறேன்.

யா அல்லாஹ்!நீ எனக்கருளிய அருட்கொடைகளும், ஆரோக்கியமும், என்னை விட்டுப் போய்விடுவதை விட்டும், திடீரென வரும் உன் வேதனைகளை விட்டும், உன்னுடைய எல்லாக் கோபங்களை விட்டும், உன்னிடம் காவல் தேடுகிறேன்.

யா அல்லாஹ்! கட்டடங்கள் இடிந்து விழுதல், தவறிவிழுதல், தண்ணீரில் மூழ்குதல், நெருப்பில் கரியுதல், இயலாத முதுமை, ஆகியவற்றிலிருந்தும், மரண நேரத்தில் ஷைத்தான் என்னை வழி கெடுப்பதை விட்டும், கொடிய விஷப் பிராணிகள் கொட்டி மரணமடைவதிலிருந்தும், இழுக்களவில் கொண்டு சேர்க்கும்படியான பேராசையை விட்டும், கெட்ட குணங்கள், கெட்ட செயல்கள், கெட்ட நோய்கள், கெட்ட எண்ணங்கள், ஆகியவற்றவை விட்டும், கடன் அதிகரிப்பதை விட்டும், எதிரிகளின் ஆதிக்கத்தை விட்டும், எங்களுக்கு ஏற்படும் தங்கடங்கள் மீது எதிரிகள் மகிழ்ச்சியடைவதை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன்.

யா அல்லாஹ்! எனது செயல்களில் பாதுகாப்பாக எனது மார்க்கத்தையும், பிழைப்பிருக்கும்படியாக எனது இம்மை வாழ்வையும், நான் திரும்பச் செல்லவிருக்கும் எனது மறுமை வாழ்வையும், சீர்படுத்துவாயாக! நன்மையான செயல்களை அதிகம் செய்யும்படியாக எனது வாழ்க்கையையும், அனைத்துத் தீமைகளை விட்டும் நிவர்த்தியானதாக எனது மரணத்தையும், ஆக்கியருள்வாயாக. என்னைப் படைத்தவனே எனக்கு ஆதரவாக உதவியளி, எதிராக உதவாதே. எனக்கு சாதகமாக ஆதரவளி, பாதகமாக ஆதரவளிக்காதே. எனக்கு நேர்வழி காட்டி அவ்வழியை எளிதாக்கியருள்வாயாக.

யா அல்லாஹ்! உன்னை அதிகம் நினைக்கக் கூடியவனாகவும், அதிகம் வழிப்படக் கூடியவனாகவும், அதிகம் அஞ்சக் கூடியவனாகவும், உன் பக்கமே அதிகம் மீள்பனாகவும் என்னை ஆக்கியருள்வாயாக.

யா அல்லாஹ்! பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்வாயாக. என் பாவத்தைத் தூய்மைப் படுத்துவாயாக. எனது பிரார்த்தணைக்கு பதிலளிப்பாயாக. என்னுடைய ஆதாரத்தை உறுதிபெறச் செய்வாயாக. எனது உள்ளத்தை நேர்வழிப்படுத்துவாயாக. எனது நாவை உறுதியாக்குவாயாக. பொறாமை நெஞ்சில் குடி கொள்வதை விட்டும் என்னை அப்பாற்படுத்துவாயாக.

யா அல்லாஹ்! என்னுடைய செயல்களில் நான் நிலைபட்டிருப்பதையும், நேர் வழியில் நான் உறுதியுடன் இருப்பதையும், உன்னிடம் கேட்கிறேன். நீ எனக்கு அருளிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தி உன்னை நன்முறையில் வணங்கக் கூடியவனாக என்னை ஆக்கிவைப்பாயாக.

யா அல்லாஹ்! குறையற்ற உள்ளத்தையும், உண்மை பேசும் நாவையும், தந்தருள உன்னிடம் வேண்டுகிறேன். நீ நன்மை என அறிந்த அனைத்தையும் தந்தருள உன்னிடம் வேண்டுகிறேன். நீ தீமை என அறிந்த அனைத்திலிருந்தும் உன்னிடம் காவல் தேடுகிறேன். நீ அறிந்த அனைத்திலும் பிழை பொறுக்கத் தேடுகிறேன். மறைவானவற்றை நீயே நன்கறிந்தவன்.

யா அல்லாஹ்! நேர் வழியில் செல்ல எனக்கு மன உதிப்பைத் தருவாயாக. எனது ஆன்மாவின் தீங்கை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக. நல்லவற்றை செய்வதையும், தீயவற்றை விடுவதையும், ஏழைகளை நேசிப்பதையும் உன்னிடம் கேட்கிறேன். பாவ மன்னிப்பை உன்னிடம் கேட்கிறேன். உனது அடியார்களைச் சோதிக்க நீ நாடினால் அச்சோதனையில் நான் சிக்காமல் என்னை மரணிக்கச் செய்வாயாக.

யா அல்லாஹ்! உனது நேசத்தையும், உன்னை நேசிப்போர் நேசத்தையும், உனது நேசத்தின் பக்கம் கொண்டு சேர்க்கும் அனைத்து செயல்களையும் நேசிப்பதையும், உன்னிடம் கேட்கிறேன்.

யா அல்லாஹ்! நல்ல கேள்வியையும், நல்ல துஆவையும், நல்ல வெற்றியையும், நற்கூலியையும் எனக்குத் தந்தருள்வாயாக. என்னை நிலையானவனாக ஆக்கி, எனது நன்மையின் எடையை அதிகரிப்பாயாக. எனது ஈமானை முழுமைப்படுத்துவாயாக. சுவனத்தில் எனது தரத்தை உயர்த்துவாயாக. எனது தொழுகைகளை ஏற்றுக் கொள்வாயாக. எனது தவறுகளை மன்னிப்பாயாக. சுவனத்தில் உயர்ந்த பதவியைத் தருவாயாக.

யா அல்லாஹ்! நற்செயல்களின் திறவுகோலையும், அதன் நல்ல துவக்கத்தையும், நல்ல முடிவையும், அக புற நன்மைகள் அனைத்தையும் உன்னிடம் கேட்கிறேன். சுவனத்தில் உயர்ந்த பொறுப்புகளைத் தருவாயாக.

யா அல்லாஹ்! எனது சிறப்பை உயர்த்துவாயாக. பாவத்தை விட்டுவிடுவாயாக. என் உள்ளத்தை; தூய்மைப் படுத்துவாயாக. எனது வெட்கத்தலங்களைப் பாதுகாப்பாயாக. எனது பாவங்களை மன்னிப்பாயாக. சுவனத்தில் உயர்பதவியைத் தருவாயாக. என்னுடைய கேள்வி, பார்வை, ஆத்மா, தோற்றம், குணம், அனைத்திலும் பரக்கத் செய்லாயாக.

யா அல்லாஹ்! எனது குடும்பம், எனது வாழ்க்கை, எனது அறிவு ஆகிய அனைத்திலும் பரக்கத் செய்வாயாக. எனது நற்செயல்களை அங்கீகரித்து சுவனத்தில் உயர் பதவியைத் தருவாயாக.உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என் உள்ளத்தை உன் மார்க்கத்தில் நிலக்கச் செய்வாயாக. உள்ளங்களையும் பார்வைகளையும் திருப்பக் கூடியவனே! எங்கள் உள்ளங்களை உன்னை வழிபடுவதன் பக்கம் திருப்புவாயாக. நன்மையைக் குறைக்காமல் அதிகம் தருவாயாக. இழிவு படுத்தாமல் எங்களை சங்கைப் படுத்துவாயாக. இல்லை எனச் சொல்லாமல் தருவாயாக. குறைவின்றிக் கொடுப்பாயாக.

யா அல்லாஹ்! எங்கள் அனைத்துக் காரியங்களின் முடிவையும் நல்முடிவாக்குவாயாக. இம்மையின் இழிவை விட்டும், மறுமையின் வேதனையை விட்டும் எங்களைக் காப்பாற்றுவாயாக. எங்களுக்கும் எங்கள் பாவங்களுக்கும் இடையில் சுற்றி வரும் உள்ளச்சத்தை எங்களுக்குத் தருவாயாக. உனது சுவனத்தின் பக்கம் கொண்டு சேர்க்கும் உன் வழிபாட்டை எங்களுக்குத் தருவாயாக.

யா அல்லாஹ்! எங்கள் கேள்விகளிலும் எங்கள் பார்வைகளிலும், எங்கள் சக்திகளிலும் சுகத்தைத் தருவாயாக. எங்களுக்கு அநீதி இழைத்தவர்களிடம் நீ பழிக்குப் பழி வாங்குவாயாக. எங்கள் பகைவர்களுக்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக. உலகத்தை எங்கள் முக்கிய நோக்கமாகவும், அதற்காகவே வாழக்கூடியவர்களாகவும் எங்களை ஆக்கிவிடாதே. எங்கள் சோதனைகளை எங்கள் மார்க்கத்தில் ஆக்கிவிடாதே. நாங்கள் செய்த பாவங்களின் காரணமாக உன்னை அஞ்சாதவனையும், கருணையில்லாதவனையும் எங்கள் மீது சாட்டிவிடாதே.

யா அல்லாஹ்! உனது அருளைப் பெற்றுக் கொள்ளத் தேவையான அனைத்தையும், உனது மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளத் தேவையான மன உறுதியையும் உன்னிடம் கேட்கிறேன். அனைத்து நன்மைகளையும் கனீமத்தாகத் தந்து அனைத்து தீமைகளை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக. சுவனம் கிடைத்து வெற்றி பெற்றவனாகவும், நரகத்தை விட்டு விடுதலை பெற்றவனாகவும் என்னை ஆக்குவாயாக.

கிருபையாளர்களுக் கெல்லாம் கிருபையாளனாகிய இறைவனே! எங்கள் எந்தப் பாவத்தையும் மன்னிக்காமல் விட்டுவிடாதே. எங்கள் எந்தக் குறையையும் மறைக்காமல் விட்டு விடாதே. எங்கள் எந்தக் கவலையையும் சந்தோஷப்படுத்தாமல் விட்டு விடாதே. எங்கள் எந்தக் கடனையும் நிறைவேற்றாமல் வைத்து விடாதே. எங்களுக்குப் பயனுள்ள ஈருலக எந்தத் தேவைகளையும் நிறைவேற்றாமல் விட்டுவிடாதே.

யா அல்லாஹ்! என் இதயத்திற்கு நேர் வழி காட்டும்படியான அருளை, சிதறுண்டுக் கிடக்கும் என் செயல்களை ஒன்று சேர்க்கும்படியான அருளை, என்னிடமிருந்து மறைந்து போனவற்றை பாதுகாக்கும்படியான அருளை, என் முன்னுள்ளவற்றை உன்னளவில் உயர்த்திக் கொள்ளும்படியான அருளை, என் முகத்தை வெண்மையாக்கும்படியான அருளை, எனது அறிவைத் தூய்மைப்படுத்தும் படியான அருளை, எனக்கு நேர்வழி காட்டி என்னை விட்டும் பித்னாக்ளை அப்புறப்படுத்தும்படியான அருளை, அனைத்துத் தீய செயல்களை விட்டும் என்னைப் பாதுகாக்கும்படியான அருளை உன்னிடம் கேட்கிறேன்.

யா அல்லாஹ்! நியாயத் தீர்பட்பு நாளில் வெற்றியையும், நல்லோர்கள் வாழ்வையும், உயிர்த்தியாகிகள் இருப்பிடத்தையும், நபிமார்களின் தோழமையையும், எதிரிகளுக்குக் கேடாக எனக்கு வெற்றியையும் உன்னிடம் கேட்கிறேன். சரியான ஈமானையும், நற்குணத்தில் நம்பிக்கைகையயும் வெற்றிமேல் வெற்றியையும் எனக்குத் தந்தருள்வாயாக.

யா அல்லாஹ்! உனது அருட் கொடையையும், ஆபியத்தையும், பாவமன்னிப்பையும், விருப்பத்தையும், ஆரோக்கியத்தையும், பத்தினித்தனத்தையும், நற்குணத்தையும், உனது தீர்ப்பைப் பொருந்திக் கொள்ளும் உள்ளத்தையும். உன்னிடம் கேட்கிறேன்.யா அல்லாஹ்! என் நப்ஸின் தீங்கிலிருந்தும், உனது ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் அனைத்து உயிர்ப்பிராணிகளின் தீங்கிலிருந்தும், உன்னிடம் காவல் தேடுகிறேன். (எனது நாயனாகிய நீயே) நேர் வழியில் நடத்துபவன்.

யா அல்லாஹ்! எனது பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறாய். நான் இருக்கும் இடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய். என் இரகசியத்தையும், பரகசியத்தையும் நீயே அறிந்தவன். உனக்குத் தெரியாமல் என் செயல்களில் எதுவும் இல்லை. நானோ பரம ஏழையாகவும் தேவையுடையவனாகவும் தஞ்சம் நாடி அபயம் கோரக் கூடியவனாக உள்ளேன். உன்னை அஞ்சி பயந்து நான் செய்த பாவங்களை ஒப்புக் கொண்டு மிஸ்கீன்கள் கேட்பது போல் கேட்கிறேன். பார்வை இழந்தவன் பயந்து உன்னை அழைத்துக் கேட்பது போல் கேட்கிறேன். கேவலமான பாவி இறைஞ்சுவது போல் இறைஞ்சிக் கேட்கிறேன். தலைதாழ்த்தி தன்னையே உனக்கு அர்ப்பணித்தவனாக உன்னிடம் இறைஞ்சுகிறேன். எனது பிரார்த்தணைகளை அங்கீகரிப்பாயாக.

ஸலவாத்தும் ஸலாமும் எங்கள் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் அனைவர் மீதும் உண்டவதாக.



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

நாவை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்

நம்பிக்கை கொண்டோரே! 


ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக்கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களை கேலி செய்ய வேண்டாம்.இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக்கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக்காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. எவர்கள் இவற்றிலிருந்து மீளவில்லையோ அத்தகையவர்கள் அநியாயக்காரர்களாவார்கள்’. 


ஒவ்வொரு முஸ்லிமும் பிற முஸ்லிமின் மீது அவருடைய இரத்தம், கண்ணியம், பொருள் இவற்றை களங்கப்படுத்துவது ஹராமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-முஸ்லிம்) 


"எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சொர்கத்திற்க்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். என்று நபி(ஸல்;) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி)"


யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் பக்கத்து வீட்டாருக்கு துன்பம் தராமல் இருக்கட்டும். யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதைச் சொல்லட்டும். இல்லையெனில் வாய் மூடி இருக்கட்டும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-புகாரி)                                                                                                                              


மனிதனைவிட சக்தி வாய்ந்த எத்தனையோ படைப்புகளை அல்லாஹ் படைத்துள்ளான். ஆனால் அவைகளுக்கு வழங்காத பல உன்னதமான சிறப்பை மனிதனுக்கு வழங்கியுள்ளான். அவற்றில் முக்கிய இடத்தை வகிப்பது "பேசும் சக்தி". இந்த பேசும் சக்திதான் மனிதனுக்கு ஈருலகிலும் அனுகூலமாகவும் அல்லது அழிவாகவும் அமைகிறது. காரணம் மனிதனின் வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு வார்த்தையும் இறைவனால் கண்காணிக்கப்படுகிறது. பதிவு செய்யப்படுகிறது.. இது குறித்து இறைவன் தனது திருமறையில்;

"மனிதன் எதை கூறிய போதிலும் (அதனை எழுதக்) காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை." (அல்குர்ஆன் 50:18)
நாவின் எச்சரிக்கைப்பற்றி அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கைகள் பல உள்ளன.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: மனிதன் காலைப்பொழுதை அடைந்தவுடன் அவனது எல்லா உறுப்புகளும் நாவிடம் "நீ எங்களுடைய காரியத்தில் அல்லாஹுத்த ஆலாவை அஞ்சிக்கொள். ஏனெனில் எங்களுடைய காரியங்கள் உன்னுடன் தான் இணைந்துள்ளன. நீ நேராக இருந்தால் நாங்களும் நேராக இருப்போம். நீ வளைந்து இருந்தால் நாங்களும் வளைந்து விடுவோம். (பிறகு அதற்குறிய தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும்) என்று மிகவும் பணிவுடன் வேண்டுகின்றன. (அறிவிப்பாளர்: ஹளரத் அபூ ஸஈத் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: "அடியான் தனது நாவை பாதுகாக்காதவரை ஈமானுடைய அந்தரங்கத்தை அடைந்து கொள்ள முடியாது. (அறிவிப்பாளர்: ஹளரத் அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: மஜ்மவுஜ்ஜவாயித்)
ஒருமுறை உக்பத் இப்னு ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு எனும் தோழர் "இறைத்தூதர் அவர்களே! ஈடேற்றம் பெற என்ன வழி?" என்று வினவுகின்றார். அதற்கு அண்ணலம் பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "உமது நாவை கட்டுப்படுத்திக் கொள்ளும். உமது பாவங்களை நினைத்து அழுதுகொண்டிருப்பீராக" என்று கூறினார்கள். (நூல்: திர்மிதீ)

ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது தோழர்களிடம் "அல்லாஹ்வுத்தஆலாவுக்கு மிகவும் பிரியமான நற்செயல் எது?" என்று வினவியபோது - தோழர்கள் அனைவரும் மவுனமாக இருந்தனர். யாரும் பதில் கூறவில்லை. "அல்லாஹ்வுக்கு பிரியமான அமல் நாவைப் பாதுகாப்பது" என்றார்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். (அறிவிப்பாளர்: ஹளரத் அபூஜிஹைப்பா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: பைஹகீ)
"(நாளை மறுமையில்) மனிதர்களை முகக் குப்புற நரகத்தில் வீழ்த்துவது அவர்களின் நாவு செய்த தவறே தவிர வேறெதுவும் இல்லை" என ஒரு நீண்ட ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ)
"மனிதன் ஒரு வார்த்தையைப் பேசி விடுகிறான். அதைப் பேசுவதில், சொல்வதில் எந்த குற்றமும் இல்லை என்று கருதுகிறான்.. ஆனால் அதன் காரணமாக எழுபது வருடத் தொலை தூரத்திற்கு சமமான அளவு நரகத்தில் போய் விழுகிறான்" (அறிவிப்பாளர்: ஹளரத் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)

நாவின் விபரீதங்களைப்பற்றி எச்சரிக்கை செய்திருக்கும் இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிலிருந்து தவிர்ந்து கொள்ளும் வழியை சொல்லாமலா இருப்பார்கள்! சொன்னார்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்:

"நல்லதை ஏவுவது அல்லது தீமையை தடுப்பது அல்லது அல்லாஹ்வை திக்ரு செய்வது ஆகியவைத்தவிர மனிதனுடைய எல்லாப் பேச்சுக்களும் அவனுக்கு நஷ்டத்தை தரும். தண்டிக்கப்படுவதற்குக் காரணமாகும். மேலும் மறுமை நாளின் மீதும் எவர் ஈமான் கொண்டாரோ அவர் நல்லதை பேசட்டும். அல்லது மவுனமாக இருக்கட்டும். (அறிவிப்பளர்: ஹளரத் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)



பொய் பேசுவதிலிருந்தும் விலகிக் கொள்ளுங்கள்’.(அல் குர்ஆன்-22:30) 

ஒரு மூஃமீன் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்கமாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-திர்மிதி)
நாம் சிந்திக்காமல் பேசும் சில வார்த்தைகள் நம்மை நரகத்தின் அடித்தளத்திற்கே கொண்டு போய்ச் சேர்த்து விடும். இன்னொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். புறம் பேசுதல், கோள் சொல்லுதல், அவதூறு கூறுதல் போன்ற தீய செயல்கள் அனைத்தும் நாவினாலேயே அரங்கேற்றம் செய்யப்படுகின்றன. 


ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தமது உரையின் போது உள்ளத்தில் இல்லாது உதட்டால் நம்பிக்கை கொண்டவர்களே முஸ்லிம்களைப் பற்றியும் புறம் பேசாதீர்கள் அவர்களது குறைகளைத் ஆராய்ந்து கொண்டிராதீர்கள் யார் மற்றவர்களின் குறைகளைத் தேடி திருகின்றாரோ அவர்களது குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிப்பான். யாருடைய குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிக்கின்றானோ அவர்கள் தமது வீட்டில் செய்யும் குறைகளையும் பகிரங்கமாக்கி அவர்களை இழிவுபடுத்தி விடுவான். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்-அஹ்மத்) 



மற்றவர்கள் சிரிக்க வேண்டும் என்பதற்க்காகப் பொய் கூறுபவனுக்கு கேடு உண்டாவதாக! அவனுக்கே கேடு, அவனுக்கே கேடு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-முஸ்லிம்)
மாபெரும் சதி யாதெனில் மற்றவன் உண்மையென நம்பக்கூடியவாறு பொய் பேசுவதாகும். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-புகாரி) 





எனவே நாவை நமது கட்டுப்பாட்டுக்குள் வைப்போம். அல்லாஹ் நல்லருள் புரிவானாக. 



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

வட்டி ஒரு பெரும் பாவம்

Svr.pamini 1. வட்டி என்றால் என்ன?: அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது. '...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279) இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130) 2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு: வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது. 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275) வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. 1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது. 2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும். 3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும். 3. வட்டி ஒரு பெரும் பாவம் : 'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 4. வட்டி ஒரு கொடிய குற்றம் : 'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ) மற்றொரு அறிவிப்பில், 'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன். 5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் : 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை: 1. நிரந்தர நரகம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085) நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர். ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான். 7. போர்ப் பிரகடணம்: வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள். 8. வட்டி வாங்குவோரின் அவல நிலை : 1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275) 2. நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962) 3. அல்லாஹ்வின் சாபம். 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 4. போர் பிரகடணம். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) 9. அடமானம்: அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார். இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன. முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும். நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும். 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 10. ஒத்தி வட்டியா?: ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும். ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 11. பேங்க்கில் பணம் போடலாமா? : வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது. இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது. இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது. இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும். 12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?: ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும். 13. குலுக்கல் சீட்டு: குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது. அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. 14. தவணை முறையில் பொருள் வாங்குவது: இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று. இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது. 15. வங்கியில் வேலை செய்வது: 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 16. பகடி கூடுமா?: பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார். பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது. 17. முடிவுரை: பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக! Svr.pamini