அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினைஇருக்கிறது.'50:35<<>>"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

பரிகாசம் ! இழிவு ! துரவித் துரவி ஆராய்வது !

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (49:11-12)
மேற்கூறிய இரண்டு வசனங்களும் இடம் பெற்றிருக்கும் அல் ஹுஜுராத் அத்தியாயம் பல்வேறு சந்தர்ப்பங்களில் இறங்கிய ஒழுக்க போதனைகளை உள்ளடக்கியுள்ளது. ஒரு இறைவிசுவாசிக்கு அவசியம் இருக்க வேண்டிய குணநலன்களைக் கற்றுத் தருவது இந்த அத்தியாயத்தின் கருப்பொருளாகக் காணப்படுகிறது. இப்போதனைகள் மதீனாவில் ஒரு கட்டுக் கோப்பான இஸ்லாமிய சமூகம் உருவாக்கப்பட்டதன் பின்னர் இறக்கப்பட்டன. அந்த சமூகத்தில் காணப்பட்ட ஜாஹிலிய்யாக் கால பண்புகளை மாற்றுவிக்க இவ்வத்தியாயத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் முனைகின்றன. அந்த வகையில் இங்கு விளக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் 11 மற்றும் 12 ஆம் வசனங்கள் ஒரு சமூகத்தின் பரஸ்பர ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் சீர்குலைத்து விடக் கூடிய மோசமான குணங்கiயிட்டு எச்சரிக்கை செய்கின்றது.
விசுவாசிகளே! எந்த ஆண்களும் மற்றெற்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம் . ஒருவேளை அவர்கள் இவர்களை விட சிறந்தவர்களாயிருக்கலாம். எந்தப் பெண்களும் மற்றெற்தப் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களை விடச் சிறந்தவர்களாயிருக்கலாம்.
இங்கு இவ்வசனத்தில் இடம் பெற்றிருக்கும் ஸகிர எனும் பதம் ஒருவரை சிறுமைப்படுத்தி தாழ்த்தி நோக்குவதைக் குறிக்கும். இன்னும் ஒருவரையொருவர் பரிகசிப்பதையும் இப்பதம் குறிக்கிறது. ஒருவன் நடத்தைகள், தோற்றம், பொருளாதார நிலை போன்றவற்றைக் கவனத்தில் கொண்டே பெரும்பாலும் தாழ்த்தப்படுகின்றன. பரிகசிக்கப்படுகின்றன. ஒரு முஸ்லிம் எப்பொழுதும் சகோதர முஸ்லிம்களை மதித்து நடக்க வேண்டும். அவர்களின் மானம் மரியாதை என்பன பங்கப்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. ஒரு முஸ்லிம் சகோதரனின் மரியாதையில் ஏற்படும களங்கம் தனது உள்ளத்தையும் வருத்த வேண்டும். இத்தகைய உணர்வுகளை தன்னகத்தே கொண்ட மனிதர்களினால் உருhவன ஒரு சமூகத்தையே முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவில் தோற்றுவித்தார்கள்.
முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு முஸ்லிமின் குருதியும் (உயிரும்) மானமும், செல்வமும், இன்னொரு முஸ்லிமின் பார்வையில் புனிதமானவையாகும். (முஸ்லிம்)
சகோதரர்களே! இஸ்லாம் கூறும் ஈமானியப் பண்புகளுக்கும் எமக்கும் இடையில் எவ்ளவு இடைவெளி ஏற்பட்டுள்ளது என்பதை அவதானிக்கும் போது நாம் வெகுதூரம் விலகிச் சென்றுள்ளோம் என்பது தெளிவாகப்படுகிறது. எமக்கு மத்தியில் ஒருவர் கதைக்கும் பொது ஒரு வார்த்தை தவறுதலாகப் பேசி விட்டால் அவரைப் பல வகையில் பரிகாசம் செய்து சிரித்து மகிழ்கின்றோம். உடல் உறுப்புக்களில் ஏற்படும் வித்தியாசங்களை அல்லது தோற்றங்கள் நடை, பேச்சு, பழக்க வழக்கங்களைப் பார்த்து கிண்டல் செய்கிறோம். இன்னும் சிலர் வயோதிகர்களைக் கண்டு விட்டால் அவர்களின் மனம் புண்படும் அளவுக்கு அவர்களை நையாண்டி செய்கின்றனர்.
இன்னும் எமக்கு மத்தியில் ஒருவர் இஸ்லாமியப் பண்புகளை ஏற்று நடக்கும் போது அல்லது ஒரு குறையை எமக்கு மத்தியில் சுட்டிக் காட்டும் போது அவரை நாம் பரிகசிக்கின்றோம். கண்சாடை செய்து அடுத்தவர்களின் கவனததையும் திருப்பி சிரிக்க வைக்கின்றோம். அடுத்து, சில சகோதரர்கள் மற்றும் சிலரின் குரல் வன்மையை பழித்துக் காட்டுவதை அவதானிக்கின்றோம். இவ்வாறான மோசமான செயல்களைப் புரியம் ஒருவர் அடுத்த சகோதரர் ஒருவரின் மனோநிலை பாதிக்கப்படுகின்றது. மனம் வேதனையடைகின்றது என்பதைச் சற்றும் கவனத்தில் கொள்வதில்லை.

பரிகாசத்தைத் தமது தொழிலாகக் கொண்டு செயல்படும் சகோதரர்கள் தாம் பரிகசிக்கும் சகோதரர் அல்லாஹ்விடத்தில் உயர்வான அந்தஸ்தில் இருக்கலாம் என்பதை மறந்து விடுகின்றனர்.
பரிகசிக்கப்படுபவர் அல்லாஹ்வின் பார்வையில் மறுமையின் நற்பேறுகளைப் பெறுவதற்கு மிகவும் அருகதையுடையவராகக் காணப்படலாம். ஆனால் வெளித்தோற்றத்தில் அவர் ஒரு பரதேசியைப் போன்று காட்சியளிக்கலாம். இறைத்தூதரின் வாக்கு இதனை உண்மைப்படுத்துகிறது.
நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உடற்கட்டுகளையோ தோற்றங்களையோ பார்க்க மாட்டான். மாறாக உங்களின் உள்ளத்தையே அவதானிக்கின்றான். (முஸ்லிம்)
பரிகசிப்பவர்கள் இவ்வுலகில் தமது செயல்களுக்கான விளைவுகளைக் காணாத போதும் மறுமையில் கண்டு கொள்வார்கள். அவர்கள் கண்சாடையின் மூலம் ஒருவரை பரிகசிக்கும் போது அச்செயல் பதிவு செய்யப்படுகின்றது.
ஓ! எங்களுடைய கேடே! இதென்ன புத்தகம் (எங்களுடைய பாவங்கள்) சிறிதோ பெரிதோ ஒன்றையும் விடாது இதில் வரையப் பெற்றிருக்கின்றதோ! என்று அவர்கள் கூறுவதை நீர் காண்பீர். (18:19)
இந்த வசனத்தில் வந்திருக்கும் சிறிய பாவங்கள் என்பது பரிகாசத்தைக் குறிக்கின்றது என இமாம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். இங்கு ஆண்கள், ஆண்களையும், பெண்கள் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம் என வந்துள்ள போதும் ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் பரிகசிப்பதையும் இவ்வசனங்கள் தடை செய்கின்றன என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஈமானிய உணர்வோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சகோதரர்கள் இச்செயல்களையிட்டு எப்போதும் தங்கள் உறுப்புக்களை எச்சரிக்கையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் ஒருவரையொருவர் குத்திப் பேச வேண்டாம்
மக்கள் தங்களுக்கு மத்தியில் ஒருவர் இன்னொருவரைக் குத்திப் பேசுதல், ஏளனஞ் செய்தல், குறை கூறித் திரிதல் போன்ற செயல்களை இவ்வசனம் குறித்துக் காட்டுகிறது. இன்னும் மக்களைப் பழித்தல் போன்ற செயல்களையும் குறிக்கும். மக்களை நேருக்கு நேர் ஏளனஞ் செய்து கொண்டும் மறைமுகமாக மக்கள் மத்தியில் ஏனையோரின் குறைகளை கூறித்திரிபவனையும் அல்குர்ஆன் சபிக்கிறது. ஒருவர் ஏதேனும் ஒரு தவறைச் செய்து விட்டால் அவருடன் நேரடியாகப் பேசி அவரின் தவறை திருத்த முனைய வேண்டும். மாறாக அவரின் தவறை ஏனைய மக்களிடம் கூறித் திரிவதில் எந்த நலனும் ஏற்படப் போவதில்லை. அன்றி மக்கள் மத்தியில் பகையுணர்வுகளையே வளர்த்து விடுகின்றது. அல்குர்ஆன் ஏற்படுத்த விரும்பும் உயர்ந்த சமூக அமைப்பைச் சீர்குலைக்கும் பண்புகளில் ஒன்றாக இது காணப்படுகின்றமையினாலேயே அல்குர்ஆன் இதனைக் கண்டனம் செய்கிறது.
நீங்கள் ஒருவரையொருவர் மோசமான பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள்.
இவ்வசனம் இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர் மக்கள் மத்தியில் பரவிக் காணப்பட்ட மோசமான பண்பு ஒன்றினை கண்டித்தே இறக்கப்பட்டது. இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்டு சென்ற போது அங்கு ஒருவருக்கு இரண்டு அல்லது மூன்று பட்டப்பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன. இறைத்தூதர் அவர்கள் மதீனாவை அடைந்த போது மக்கள் சிலர், சிலருக்கு பட்டப் பெயர் கூறி அழைக்கின்றனர் என்ற விசயத்தைக் கூறினர். அந்தச் சந்தர்ப்பத்திலேயே இவ்வசனம் இறக்கப்பட்டது.
இந்த ஜாஹிலிய்யப் பண்பு இன்றைய சமூகங்களில் மலிந்து காணப்படுகின்றது. சாதாரண முஸ்லிம்கள் பட்டப்பெயர் சூட்டுவது ஒரு புறமிருக்க இஸ்லாத்தோடு மிகவம் நெருக்கமான, அல்குர்ஆனை சுன்னாவைக் கற்பவர்களுக்கு மத்தியிலமு; நாளாந்த இஸ்லாமியக் கருத்துக்களை மரிமாறிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியிலும் இப்பண்பு பரவி இருப்பது கவலைக்கிடமானதாகும். இன்று சாதாரணமாக தடியான், மொட்டையன், கிழவன், நொண்டியன் போன்ற மோசமான பண்புகளைக் கூறி மக்கள் அழைக்கபப்டுகின்றனர். மேலும் இஸ்லாத்தை ஏற்ற ஒருவரை முன்னைய மதத்தைக் கூறி தமிழன், யூதன் என்று அழைக்கப்படுவதுமுண்டு. இவ்வாறு பட்டப் பெயர் சூட்டுவது ஒருவர் இன்னொருவருக்குப் புரியும் அநியாயமாகமாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரனாவான். அவன் தனது சகோதரனுக்கு அநீதி இழைக்கவோ, அவனை இழிவு படுத்தவோ மாட்டான்.
இறைநம்பிக்கை கொண்டதன் பின்னர் மோசமா பெயர்களைச் சூட்டுவது மிகவும் கெட்ட செயலாகும். எவர்கள் இந்த நடத்தையைக் கைவிடவில்லையோ அவாகள் தாம் கொடுமைக்காரர்கள்.
ஒரு விசுவாசி பட்டப் பெயர் கூறி ஒருவரை அழைப்பது மிகவும் மோசமான ஒரு பாவச் செயலாகும் என்று இவ்வசனம் தெளிவாகக் கூறுகின்றது. அத்தோடு இவ்வசனத்தில் மேலே கூறப்பட்ட பண்புகளும் ஈமானுக்கு புறம்பானவைகளாகும். தொடர்ந்து இந்த இழிச் செயல்களைப் புரிந்து வரும் ஒருவன் விசுவாசியாக இருக்க முடியாது. அவரை இப்பண்புகள் ஈமானி கூட்டத்தை விட்டு வெளியேற்றி விடுகின்றன. இச்செயல்கள் ஒவ்வொன்றும் இஸ்லாம் பூண்டோடு அழித்தொழித்த ஜாஹிலிய்யாக் கால பண்புகள் என்பதைத் தெளிவாகப் புரிந்து அவற்றை விட்டும் ஒதுங்கி வாழ்வதன் மூலமே ஒருவரின் ஈமான் பசுமையானதாகக் காட்சியளிக்கும்.
விசுவாசிகளே! அதிகமாக சந்தேகங் கொள்வதைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன.
பொதுவாக ஒருவர் மற்றவரின் நடத்தைகள், பேச்சுக்கள் போன்றவற்றில் சந்தேகங் கொள்வதை ழன்னுஎன் பதம் விககுகின்றது. இவ்வசனத்தில் அதிகமாக என்று கூறப்பட்டிருப்பது அனைத்து விதமான யூகங்களில் (சந்தேகங்களில்) இருந்தும் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதேயாகும். ஏனெனில் சில யூகங்கள் பாவமாக அமைகின்றன.
ஒருவர் இன்னொருவரைப் பற்றி எக்காரணமுமின்றி சந்தேகப்படுதல், சிலரை எப்போதும் சந்தேக எண்ணத்துடன் அணுகுவது, வெளிப்படையாக நல்லவர்கள், கண்ணியமானவர்கள் என்று தோன்றுபவர்களையும் சந்தேக நோக்கோடு பார்ப்பது போன்ற வரையறைகளுக்குட்பட்ட சந்தேகங்கள் யூகங்கள் பாவமானவையாகக் காணப்படுகின்றன.
இஸ்லாம் சந்தேகங் கொள்வதை முற்றாக எச்சரிக்கின்றது. ஏனெனில் எந்த சந்தேகத்தில் தீங்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியாது.. (புகாரி)

ஏதேனம் ஒரு விசயம் தொடர்பாகச் சந்தேகம் ஏற்பட்டால் அச்சந்தேகத்தின் நிழலில் நின்று கூட இறுதி முடிவு எடுக்கக் கூடாது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் நல்லெண்ணம் கொள்ளுமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் போதித்துள்ளார்கள். ஒருவரின் செயலில் நன்மைக்கும் தீமைக்கும் இடமிருக்கும் போது வீண் சந்தேகங் கொண்டு தீய முடிவுகளை எடுப்பது பாவமாக அமைகின்றது. ஒருவரின் செயல்களையிட்டு நல்லெண்ணம் கொள்வதே முஃமின்களின் பண்பாகும் என அல்குர்ஆன் பல இடங்களில் உணர்த்துகின்றது.
இங்கு இன்னுமொரு அம்சமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதாவது ஒரு சமூகத்தில் மக்களுடன் இணைந்து வாழ்கின்ற ஒவ்வொருவரும் ஏனையோரின் உள்ளங்களில் சந்தேகங்களை எழுப்பி விடும் வகையில் செயல்படக் கூடாது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனதுமனiவி ஸபிய்யாவை அழைத்துச் சென்ற போது, இரண்டு ஸஹாபிகள் (நபித்தோழர்கள்) அவர்களைக் கடந்து சென்ற பொது அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குச் ஸலாம் கூறினார்கள். அப்போது அவர்களை நிறுத்தி தன்னுடன் இருக்கும் பெண் தன் மனைவி ஸபிய்யா என்று கூறி அவர்கள் இருவரையும் சந்தேகம் எனும் நோயில் இருந்து காப்பாற்றினார்கள். இது போன்ற முன்மாதிரிகளைக் கடைபிடிக்கும் போது பல தீமைகளைத் தடை செய்யலாம். சந்தேகம் எனும் நோய்க்கு உள்ளத்தில் இடமளிக்கும் போது இன்னும் பல கொடிய நோய்கள் தோன்றி சமூகத்தினை முழமையாக உருக்குலைத்த விடுகின்றன.
மேலும் துப்பறிவதில் ஈடுபடாதீர்கள்.
ஒருவரின் சந்தேகம் ஏற்பட்டு விட்டால் மக்கள் அவரின் செயல்கள் ஒவ்வொன்றையும் துரவித் துரவி ஆராய முற்படுகின்றனர். முஹம்மத் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது மனித கண்ணியங்கள் உரிமைகள் என்பவற்றுக்கான உறுதியான பாதுகாப்பினை ஏற்படுத்தினார்கள். ஒரு முஸ்லிமின் சொத்துக்கள், மானம், உயிர் என்பன புனிதமானவைகளாகும். அவற்றில் களங்கம் ஏற்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாகும். முஸ்லிம்களின் குறைகளைத் துரவித் தேடித் திரிவது, துரவித் துரவி ஆராய்வது போன்ற செயல்கள் மோசமான பாவங்களாகும். அவற்றுக்கான தண்டனைகள் கொடியவையாகும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :ஒருவரின் வீட்டில் நடக்கும் செயல்கள் அவரின் அனுமதியின்றி யார் அறிந்து கொள்ள முனைகின்றானோ அவனின் கண்களைக் பிடுங்கி விடுவது அவரின் மீது குற்றமாகாது (புகாரி)



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

வட்டி ஒரு பெரும் பாவம்

Svr.pamini 1. வட்டி என்றால் என்ன?: அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது. '...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279) இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130) 2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு: வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது. 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275) வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. 1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது. 2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும். 3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும். 3. வட்டி ஒரு பெரும் பாவம் : 'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 4. வட்டி ஒரு கொடிய குற்றம் : 'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ) மற்றொரு அறிவிப்பில், 'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன். 5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் : 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை: 1. நிரந்தர நரகம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085) நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர். ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான். 7. போர்ப் பிரகடணம்: வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள். 8. வட்டி வாங்குவோரின் அவல நிலை : 1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275) 2. நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962) 3. அல்லாஹ்வின் சாபம். 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 4. போர் பிரகடணம். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) 9. அடமானம்: அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார். இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன. முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும். நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும். 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 10. ஒத்தி வட்டியா?: ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும். ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 11. பேங்க்கில் பணம் போடலாமா? : வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது. இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது. இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது. இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும். 12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?: ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும். 13. குலுக்கல் சீட்டு: குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது. அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. 14. தவணை முறையில் பொருள் வாங்குவது: இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று. இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது. 15. வங்கியில் வேலை செய்வது: 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 16. பகடி கூடுமா?: பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார். பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது. 17. முடிவுரை: பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக! Svr.pamini