அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினைஇருக்கிறது.'50:35<<>>"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

சரியான பாதை . ?

முஸ்லிம் சமூகத்தையும் இஸ்லாத்தையும் ஒழித்துக் கட்டுவதற்காக இஸ்லாத்தின் எதிரிகள் மேற்கொள்கின்ற சூழ்ச்சிகளில் முக்கியமானது முஸ்லிம் பெண்களை சீரழித்து விடுவதாகும். அதன்மூலம் தமது கனவுகளை நனவாக்க அவர்கள் முயற்சிக்கின்றார்கள் என்பதை கடந்த இதழில் நோக்கினோம்.......
இவள் இல்லாமல் இந்த சமூகம் இருக்க முடியாது. அல்லாஹ்வின் பாதுகாப்பு இவளை சுற்றி இருக்கும். கண்ணியமான இஸ்லாமிய சூழலில் வளர்ந்த இவள் மார்க்கத்தை விரும்புபவள்அல்லாஹ்விற்கு வழிபடுபவள். அல்லாஹ்வை தனதிரட்சகனாகவும்இஸ்லாத்தை தனது மார்க்கமாகவும்முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகவும் ரஸூலாகவும் ஏற்றுக் கொண்டவள்.
எமது பாதைகளில் எங்கிருந்து எமது பயணத்தை ஆரம்பிப்பதுஎமக்கு எத்தகைய கட்டுச்சாதனங்கள் தேவை என்பதை விளங்கிக் கொள்வதற்கு சென்ற இதழில் நாம் நோக்கியவிசயங்கள்  போதுமானது. இவ்விதழில் இன்னும் சில விசயங்கள் நோக்குவோம்.
எமது சமூகத்தில் ஒரு பெண்ணின் பெறுமானம் என்னஅவள் இந்த சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய பணி என்னஅவள் தன்னை சூழ இடம்பெறுகின்ற நிகழ்வுகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறாளா?அந்த நிகழ்வுகளுக்கு முன்னால் தனது பொறுப்புக்களை பொறுமையுடன் சுமந்து செல்ல தயாராக இருக்கிறாளாபோன்ற பல கேள்விகள் இன்றைய எமது சமூகத்தை நோக்கும்போது எழுகின்றன.
எமது முஸ்லிம் பெண்களின் கவனத்தை திசை திருப்புவதற்கும் அவர்களது செயற்பாடுகளை சீரழிப் பதற்கும் பல சக்திகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின் றன. அந்த சக்திகளை எதிர்கொள்வதில் எமது பெண்கள் பல வகையினராக காணப்படுகின்றனர். அவ்வகையினர்களைப் பற்றி நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.

1. பாரம்பரிய பெண்
இவள் தன்னை சீரான முறையில் உருவாக்கிக் கொள்ளாதவள்சரியான பாதையை அறிந்துகொள்வதற் காக இஸ்லாத்தின் வழிகாட்டல்களை பெற்றுக் கொள்ளா தவள்பாரம்பரிய வழிமுறைகளில் வளர்ந்தவள். வழக்கா றுகளை கண்ணியப்படுத்துபவள்சூழலுடன் ஒன்றித்துச் செல்பவள்.
இவளது சிந்தனைநம்பிக்கைபண்பாடு போன்றன அவள் இஸ்லாத்தை வெறுக்கின்ற ஒரு சமூகத்தில் தோன்றவில்லை என்பதை காட்டுகின்றது. இவள் சில கிரியைகளை நிறைவேற்றுகின்றாள். இவளது இந்த செயற்பாடுகளுக்குக் காரணம் இஸ்லாத்தை சரியான முறையில் விளங்காமையாகும்.
இவ்வாறான பெண்கள் சமூகத்தில் நிறையவே காணப்படுகின்றனர். இவர்கள் பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுக்க மாட்டார்கள். கஷ்டங் களைத் தாங்கிக் கொள்ளமாட்டார்கள். ஒரு நவீன சிந்தனை கொண்ட மனிதனை திருமணம் முடித்தால் அவனது நடத்தைக்குப் பின்னால் சென்றுவிடுவார்கள். அவனது நம்பிக்கைஅறிவு போன்றவற்றால் தாக்கமடைவார்கள்.

2. குழம்பிய பெண்
இவள் மார்க்கத்தில் சில விடயங்களை மட்டும் அறிந்துகொண்டிருப்பவள். இவளுக்கு பலமான ஈமான் மார்க்கம் பற்றிய சரியான தெளிவு போன்றன கிடைக்காவிட்டால் சவால்களை எதிர்கொள்வதில் மிகவும் சிரமப்படுவாள். இவளை இஸ்லாத்தின் எதிரிகள் மிக நன்றாக பயன்படுத்திக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது. நாகரிகம்ஆடம்பரம்சொகுசான வாழ்க்கைக்கு இவள் இலகுவாக ஈர்க்கப்படுவாள்.
இவள் நாகரிக வாழ்க்கைக்கும் இஸ்லாம் கூறுகின்ற விதமான வாழ்க்கைக்குமிடையே அல்லல்படுவாள். உண்மையில் இஸ்லாம் உலகை வெறுத்தொதுக்க வேண்டுமென்றோ அல்லது அத்துமீறி அனுபவிக்க வேண்டுமென்றோ கூறவில்லை. மாற்றமாக அல் லாஹ்வை மறந்து உலக வாழ்வில் மூழ்கிவிடுவதையே தடுக்கின்றது. இஸ்லாம் வறுமையில் வாழவேண்டு மென்று கூறவில்லை. மாற்றமாக ரஸூல் (ஸல்)  அவர்கள் வறுமையிலிருந்தும் குப்ரிலிருந்தும் பாது காப்புத் தேடியிருக்கின்றார்கள்.
ஐரோப்பாவைச் சேர்ந்த ஒருவர் நான் இஸ்லாத்தை நேசிக்கின்றேன். அதனை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றேன். ஆனால்நான் விமானத்தில் பயணம் செய்வதற்கும் நவீன உணவகங்களில் சாப்பிடுவதற்கும் ஆசைப்படுகின்றேன். இவற்றிற்கு இஸ்லாத்தில் அங்கீகாரமில்லை என்பதைத் தான் என்னை சிந்திக்க வைக்கின்றது என்று கூறுகிறார்.
உண்மையில் இவர் இஸ்லாத்தின் எதிரிகளின் பிரச்சாரத்தில் சிக்கிக் கொண்டுள்ளார். இஸ்லாம் அவர் கூறிய ஆசைகள் எதனையும் மறுக்கவில்லை. மாற்றமாக வீண்விரயம் செய்வதையே தடுத்துள்ளது. அல்குர்ஆன் இது பற்றி தெளிவாகவே கூறியிருக்கின்றது.
உண்பதும் பருகுவதும்உறங்குவதும் என்ற குறுகிய வட்டத்தில் மனித வாழ்வு சுருக்கிவிட இஸ்லாம் விரும்பவில்லை. அதற்கும் அப்பால் இவ்வுலக வாழ் விற்கு ஒரு நோக்கம் இருப்பதை இஸ்லாம் தெளிவுபடுத் துகின்றது. உலக இன்பங்களை ஹலாலான முறையில் அனுபவிப்பதை இஸ்லாம் தடை செய்வில்லை. உலகையும் மறுமையையும் இணைத்து பேசுகின்ற இஸ்லாத்தை சரியாக புரிந்துகொள்ளாமையே இத்தகைய தவறான மனப்பதிவுகளுக்குக் காரணமாகும்.

3. வாழும் சூழலைவிட்டு வெளியேற வேண்டியவள்
இவள் ஐரோப்பாஅமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ்கின்றவள். இவளது சூழலில் நிறைய சிக்கல்களை எதிர்கொள்கிறாள். இவள் மார்க்க விடயங்களில் உறுதியுடன் வாழ வேண்டும். இஸ்லாத்தின் வழிகாட்டல் களைப் பின்பற்றுவதற்கு கடுமையான பொறுமையைக் கைக்கொள்ள வேண்டும். இவள் வழிகெடாதிருப்பதற்கு அகீதா பண்பாடு நடத்தை போன்றவற்றில் தொடர்ந்து பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். இல்லாதபோது இவள் நாகரீக மோகத்தினுள் சிக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
4. நவீன பெண்
இவள் தன்னைச் சூழ இருக்கின்ற சூழலால் கவரப்பட் டவள். நாகரிக மோகங்களுக்குப் பின்னால் செல்பவள். நாகரிகத்தைத் தவிர வேறெதனையும் பொருட்படுத்த மாட்டாள். பாரம்பரியங்களை பின்னடைவென்றும் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கின்றதென்றும் கூறுவாள். தன்னை அலங்கரித்துக் கொள்ள கண்ணாடி முன்னால் பல மணித்தியாலங்களை செலவிடுவாள். ஆனால்தன்னைப் படைத்த இறைவனுக்கு முன்னால் சில நிமிடங்கள் நிற்பதற்கும் பின்வாங்குவாள். ஆண்களின் கைகளில் விளையாட்டுப் பொருள்போல் இவள் இருப்பாள். ஒரு நல்ல தாயாகமனைவியாகசகோதரி யாக வாழ்வதற்கு தயாராக இருக்க மாட்டாள்.

5. தஃவா பாதையிலுள்ள பெண்
இஸ்லாமிய தஃவாப் பணியை மேற்கொள்ளும் இவள்தான் இந்த சமூகத்தின் வாசனைமிக்க வசந்தம். இவள் இல்லாமல் இந்த சமூகம் இருக்க முடியாது. அல்லாஹ்வின் பாதுகாப்பு இவளை சுற்றி இருக்கும். கண்ணியமான இஸ்லாமிய சூழலில் வளர்ந்த இவள் மார்க்கத்தை விரும்புபவள்அல்லாஹ்விற்கு வழிபடுபவள். அல்லாஹ்வை தனதிரட்சகனாகவும்இஸ்லாத்தை தனது மார்க்கமாகவும்முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகவும் ரஸூலாகவும் ஏற்றுக் கொண்டவள். இவளது வீடுகணவன்பிள்ளைகள்பணம் போன்ற அனைத் தையும் அமானிதம் என்று கருதுபவள். அதனை நிறை வேற்றுவதற்காக கஷ்டங்களையும் சோகங்களையும் சகித்துக் கொள்பவள். கண்மூடித்தனமாக எதனையும் பின் பற்ற மாட்டாள். வரலாற்றில் தோன்றிய தியாகப் பெண் களை தனது முன்மாதிரியாக ஏற்றுக் கொள்வாள்.
இதுதான்  எமது யதார்த்த உலகம். இதனைப் புரிந்து கொண்டால்தான் நாம் எமது பாதையை சரியாக விளங்கிக் கொள்ள முடியும். அப்பாதையில் எமது பயணத்தை தொடர முடியும்.
  



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

வட்டி ஒரு பெரும் பாவம்

Svr.pamini 1. வட்டி என்றால் என்ன?: அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது. '...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279) இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130) 2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு: வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது. 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275) வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. 1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது. 2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும். 3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும். 3. வட்டி ஒரு பெரும் பாவம் : 'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 4. வட்டி ஒரு கொடிய குற்றம் : 'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ) மற்றொரு அறிவிப்பில், 'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன். 5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் : 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை: 1. நிரந்தர நரகம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085) நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர். ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான். 7. போர்ப் பிரகடணம்: வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள். 8. வட்டி வாங்குவோரின் அவல நிலை : 1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275) 2. நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962) 3. அல்லாஹ்வின் சாபம். 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 4. போர் பிரகடணம். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) 9. அடமானம்: அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார். இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன. முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும். நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும். 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 10. ஒத்தி வட்டியா?: ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும். ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 11. பேங்க்கில் பணம் போடலாமா? : வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது. இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது. இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது. இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும். 12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?: ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும். 13. குலுக்கல் சீட்டு: குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது. அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. 14. தவணை முறையில் பொருள் வாங்குவது: இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று. இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது. 15. வங்கியில் வேலை செய்வது: 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 16. பகடி கூடுமா?: பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார். பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது. 17. முடிவுரை: பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக! Svr.pamini