அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினைஇருக்கிறது.'50:35<<>>"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

வீட்டில் தீனை நிலைநாட்டுவோம்!


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ..


அல்லாஹ் நினைவுகூரப்படுகின்ற வீடு உயிருள்ள வீடாகும். அல்லாஹ் நினைவு கூறப்படாத வீடு இறந்த வீடாகும். அறிவிப்பவர் : அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி). ஆதாரம் : முஸ்லிம்



தீனுல் இஸ்லாத்தை இந்தப் பாருலகில் நிலைநாட்டிட வேண்டிய தலையாயப் பொறுப்பைச் சுமந்தவர்கள் முஸ்லிம்கள். தீனை நிலைநாட்டும் பணியின் தொடக்க நிலை தனிமனித உள்ளங்களில் உருவாகிறது. அடுத்ததாக அப்பணி வீட்டில் நிலைபெறுகிறது. தொடர்ந்து குடும்பம் ஊர், தேசம், வெளியுலகு என விரிந்து செல்கிறது. நாம் விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட ஹதீஸ், தீன் நிலை நாட்டப்படும் வீட்டையும், தீன்நிலைநாட்டப்படாத வீட்டையும் வேறு பிரித்து விளக்குகிறது.

அல்லாஹ் வீட்டில் நினைகூரப்படுதல் என்பது நாவசைத்து திக்ரின் வாசகங்களை உச்சாடனம்n சய்தல் என்ற அர்தத்தை மட்டும் தொனிப்பதில்லை. மாறாக, அதனை விரிந்த கருத்தில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வினதும், அவனது தூதரினதும், தீனுல் இஸ்லாத்தினதும், அதனது ஷரீஅத் சட்டத்தினதும் ஆளுகைக்கும் செல்வாக்கிற்கும் உட்பட்ட வீடே அல்லாஹ் நினைவு கூறப்படும் வீடாகும்.

இந்த வகையில் ஒரு வீட்டின் குடும்பத் தலைவன், குடும்பத்தலைவி, பிள்ளைகள் ஆகியோரது சிந்தனையை, எண்ணங்களை, உணர்வுகளை, நடத்தைகளை, கருத்துக்களை, தீர்மானங்களை தீனுல் இஸ்லாம் ஆள வேண்டும். வீட்டின் ஆதிக்கச் சக்தியாக பெண்ணியமோ, ஆணாதிக்கமோ, மனோ இச்சையயோ, மூதாதைகளின் பழக்க வழக்கங்களோ, பெரும்பான்மை சமூகத்தின் நடத்தைகளோ இருக்கக் கூடாது. தீனுல் இஸ்லாம் மட்டுமே வீட்டில் செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக இருக்க வேண்டும். இதுவே அல்லாஹ் நினைவு கூரப்படும் வீடாகும்.

இதனைத் தொடர்ந்து அவ்வீடு தனிப்பட்ட இபாதத்துக்கள் நிறைவேற்றப்படும் தலமாக இருக்கும். அங்கு ஆரம்பமாக தொழுகை நிலைநிறுத்தப்படும். அதற்காக அங்கு பிரத்யேகமாக அறை இருக்கும் இதனையே அல்குர்ஆன்.

ஆகவே, மூஸாவுக்கும், அவருடைய சகோதரருக்கும், மிஸ்ரிலே (எகிப்து) அவர்களது சமூகத்தாருக்கும் வீடுகளை ஏற்படுத்தி அவ்வீடுகளை மஸ்ஜிதுகளாக்கி (அவற்றில்) தவறாது தொழுது வாருங்கள் என்றும், அன்றியும் விசுவாசங் கொண்டோருக்கு நன்மாராயம் கூறுமாறும் வஹி அறிவித்தோம். (யூனுஸ் : 87).


தீனின் தூண் தொழுகையாகும். அது நிலைநாட்டப்பட்டால் தான் தீனின் ஏனைய பகுதிகள் உறுதியாக நிலைநிறுத்தப்படும். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் தீன் நிலைநாட்டப்படும் வீட்டின் இலட்சனத்தை பின்வருமாறு விவரித்தார்கள்.

தனது மனைவியை நித்திரையில் இருந்து விழித்தெழச் செய்தான் ஒரு கணவன். அவள் நித்திரையிலிருந்து விழித்தெழ மறுத்த போது அவன் அவளது முகத்திலே தண்ணீரைத் தெளித்தான். அப்போது அவள் எழுந்து நின்று தொழுதாள். அவனும் தொழுதான். அத்தகைய கணவனுக்கு அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக. (அஹ்மத், அபூதாவூத்).


தீன் நிலைநாட்டப்படும் வீட்டின் தலைவன் தனது நேரடி பரிபாலிப்பில் உள்ளவர்களை இபாதத்துக்கள் செய்யுமாறு கட்டளை பிறப்பிப்பான். இரவு நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருப்பார்கள். வித்ரு தொழும் நேரம் வந்து விட்டால்,

ஆயிஷாவே! எழுந்திருங்கள்! வித்ரு தொழுங்கள் என்று கூறுவார்கள்.

என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்ளக். (முஸ்லிம்).


அல்லாஹ்வின் மார்க்கம் ஆதிக்கம் செலுத்தும் வீட்டில் ஐஷத்தானிய ஆதிக்கத்திற்கு இடமிருக்க மாட்டாது. படுமோசமான, ஆபாசமும், அபத்தமும் நிறைந்த ஐஷத்தானிய ஓலம், சினிமாப் படங்களின் சத்தம், தொலைக்காட்சித் தொடர்களின் ஆராவாரம் ஆகியவற்றுக்குப் பகரமாக குர்ஆன் ஓதும் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்கள் வீடுகளைக் கப்றுகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (ஸுரத்துல் பகரா) பாராயணம் செய்யப்படும் வீட்டிலிருந்து ஷைத்தான் விரண்டோடுகின்றான். (முஸ்லிம்).


அஷ்அரீ கோத்திரத்தாரின் இல்லங்களை குர்ஆன் ஓதும் சத்தம் மூலம் இனங் கண்டு கொள்வேன், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அக்கால ஸஹாபா சமுதாயத்தின் வீடுகள் அல்லாஹ்வின் பெயர் ஒலிக்கப்படும் வீடுகளாய் அமைந்து காணப்பட்டன என்பதற்கு இது சான்றாகத் திகழ்கிறது. எமது வீடுகள் இபாதத்துக்கள் நிறைவேற்றப்படாத கபுறுகளாக இருக்கக் கூடாது. அவை கிப்லாக்களாக இருக்க வேண்டும்.

இறைவனின் நாம் சதாவும் உச்சாடனம் செய்யப்படும் வீடுகளே உயிருள்ள வீடுகள். மேலும் வீட்டு விவகாரங்கள் அனைத்திலும் அல்லாஹ்வின் கருத்து, அவனது தீர்மானம், அவனது ஏவல், அவனது விலக்கல்கள் ஆகியவற்றை முதன்மைப்படுத்தும் வீடுகளே தீன் நிலைநாட்டப்படும் வீடுகள். அல்லாஹ்வின் பெயரொலிக்கும் வீடுகள், உயிரோட்டமுள்ள வீடுகள்.

தீன் நிலைநாட்டப்படும் உயிருள்ள வீடுகளில் நோன்பு அதிகமாக நோற்கப்படும். அங்கு வாரி வழங்கும் உயர்ந்த கரங்கள் அதிகமாக இருக்கும். குடும்பத் தலைவிகள் தங்களது வீடுளை தான தர்மங்களால் மனங்கமழச் செய்ய வேண்டும் என்பது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் எதிர்பார்ப்பாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பெண்களே! நீங்கள் தான தர்மம் செய்யுங்கள். நரகவாதிகளில் அதிகமானோராக உங்களை நான் கண்டேன். (புகாரி)


ஒரு முஸ்லிமுடைய வீட்டின் பண்பாட்டை தீனுல் இஸ்லாம் ஆட்சி செய்ய வேண்டும். ஒரு குடும்பத் தலைவன் அல்லது குடும்பத் தலைவி தனது மனோஇச்சை தீர்மானத்திற்கு வருகின்ற பண்பாட்டையோ அல்லது சினிமாவும், புறச்சூழலும் வகுத்தளிக்கும் பண்பாட்டையோ அமுல்நடத்தாமல் தீனில் வழிகாட்டலின் கீழ் அமைந்த பண்பாட்டை வளர்க்க வேண்டும். இரக்கம், அன்பு, பாசம், நேசம், சகோதரத்துவம், புரிந்துணர்வு, வாய்மை, போன்ற நற்குணங்களின் இருப்பிடமாக அவ்வில்லம் இருக்க வேண்டும். பொய், புறம், கோள், அவதூறு, ஆணவம், பொறாமை முதலான நற்குணங்கள் கத்தரிக்கப்பட்ட வீடுகளே தீனின் ஆளுகைக்குட்பட்ட வீடுகள். அபூஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

எனது வீட்டில் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த போது எனது தாய், இங்கே வா உனக்குத் தின்பண்டம் தருகிறேன்! என அழைத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள். நீ கூறிய பிரகாரம் அந்தத் திண்பண்டத்தை நீ கொடுக்கவில்லையாயின் உனது பெயர் பொய்யர்களின் பட்டியலில் இடம்பெறும் என்றார்கள்.


பண்பாட்டுத் துறையில் மார்க்கம் நிலைநாட்டப்பட்ட பாங்கினை இச்சம்பவம் தெளிவுபடுத்துகிறது. தீனின் ஆளுகைக்குட்பட்ட வீட்டின் அங்கத்தினர் பரஸ்பரம் வழங்கிக் கொள்கின்ற சான்றே நற்சான்றாகும். மற்றோர் கொடுக்கின்ற சான்றை விட வீட்டார் கொடுக்கின்ற சான்றே பொருத்தமானதாகும். ஏனெனில் வீட்டிலுள்ளோர் வெளியுலகத்திற்கு தம்மை நல்லவர்களாக காட்டிக் கொள்ளவே பெரிதும் முயற்சிப்பர். தமது கணவராகிய ரஸுல் (ஸல்) அவர்கள் பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் பல் துலக்குவார்கள் என்றார்கள். அண்ணலார் வீட்டில் இருந்தால் என்ன செய்வார்கள்? என அவர்களிடம் கேட்கப்பட்ட போது, அவர்கள் தமது மனைவிமாருக்கு உதவியாக வீட்டு வேலைகளில் ஈடுபடுவார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

ரத்தினச் சுரக்கமாக ஆயிஷா (ரலி) அவர்கள் அவர்களது பண்பாடு குர்ஆனாக இருந்தது, என்ற தனது கணவர் பற்றி சான்று பகர்ந்தார்கள்..


கணவன் - மனைவி பரஸ்பரம் ஆற்ற வேண்டிய கடமைகள், உரிமைகளில் தீன் ஆட்சி செய்ய வேண்டும். மாறாக, பெண்ணியமும், ஆணாதிக்கமும் இவைகளை ஆளக் கூடாது. தீனின் செல்வாக்கினால் பாதிக்கப்டட கணவன் அல்லது மனைவி தமது கடமைகள், உரிமைகள் பற்றி சிந்தனைத் தெளிவை அல்குர்ஆன், அல் ஹதீஸ் வாயிலாகப் பெற்று, அறிந்து, தெளிந்து அதை அமுல் நடத்த வேண்டும். இங்கு இருவரினதும் சுயகௌரவம், தன்மான உணர்ச்சி குடும்ப அந்தஸ்து, மரபுகள் சம்பிரதாயங்கள், அவர்களது உரிமைகள், கடமைகளைத் தீர்மானிக்கக் கூடாது.

முதலில் கணவன் தனது மனைவி பற்றிய புரிதலை மணவாழ்க்கையின் ஆரம்பப் புள்ளியாக எடுத்துக் கொளள் வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெண்களோடு நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றள். விலா எலும்பில் மிகவும் கோணலான பகுதி மேல் பகுதியாகும். அதை நிமிர்த்த முனைந்தால் நீ அதனை உடைத்து விடுவாய்! உடைந்து விடுமே என்று நிமிர்த்தாது விட்டால் அதன் கோணல் தொடர்ந்திருக்கும். எனவே, பெண்களோடு நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். (புகாரி, முஸ்லிம்).


எனவே, தனது இயல்பு, சுபாவம், உயர்வு, உயர்ச்சி முதலான விசயங்களில் தன்னைப் போல் தனது மனைவி இருக்க வேண்டும் என ஒரு காணவர் எதிர்பார்க்கலாகாது. அவ்வாறே மனைவிக்கு ஆற்ற வேண்டிய உரிமைகளை அறிந்துணர்ந்து ஆற்றிட வேண்டும்.

முஅவியா இபுனு ஹைதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தனது மனைவிக்கு ஆற்ற வேண்டிய உரிமை என்ன? என்று கேட்டார். நீ சாப்பிட்டால் அவளுக்கும் உணவளிப்பாயாக! நீ உடை அணிந்தால் அவளுக்கும் உடை அணிவிப்பாயாக! அவளது கன்னத்தில் அறைந்து விடாதே! அவளை வீட்டிலன்றி வேறொரு விடயத்தில் வெறுத்தொதுக்கி வைத்து விடாதே! அல்லாஹ் உன்னை அசிங்கப்படுத்துவானாக என்று சபித்து விடாதே! என்று அண்ணலார் பதிலளித்தார்கள். (அபூதாவூத்).


இந்த வழிகாட்டல்கள் இஸ்லாத்தில் ஆணாதிக்கத்திற்கு சிறிதும் இடமில்லை என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

அவ்வாறே மனைவி தனது கணவன் பற்றிய புரிதலோடு வாழ்வைத் துவங்க வேண்டும். அண்ணலார் கணவனின் மகிமை பற்றிஇவ்வாறு குறிப்பிட்டார்கள்.

ஒருவரை இன்னொருவருக்கு சுஜுது செய்து சிரம் தாழ்த்த வேண்டும் என்று ஏவுவதாக இருந்தால், பெண்ணை கணவனுக்குச் சுஜுது செய்யுமாறு நான் ஏவியிருப்பேன். (திர்மிதி)


மனைவிமார் உங்களுக்கு வழங்க வேண்டிய உரிமை என்னவென்றால் நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் படுக்கையில் கால்மிதிக்க அனுமதிக்கக் கூடாது. நீங்கள் விரும்பாத யாரையும் உங்கள் வீட்டுக்குள் வருவதற்கு அனுமதிக்கக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).


இது மனைவி கணவனுக்கு வழங்க வேண்டிய உரிமை, அவள் தனது கற்பையும், கணவனது கற்பையும், கணவனின் சொத்தையும், அவனது உணர்வையும் உணர்ச்சியையும் பாதுகாக்கக் கூடிய குலவிளக்காகத் திகழ வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒரு கணவன் தன் மனைவியை படுக்கையை நோக்கி அழைத்து அவள் மறுத்து அவள் மீது கோபம் கொண்ட நிலையில் அவன் இரவைக் கழித்தால் விடியும் வரை மலக்குகள் அவளை சபிக்கின்றளர். (புகாரி, முஸ்லிம்).


இந்தக் ஹதீஸ் கணவனின் உணர்வைக் காப்பாற்றும் பாரிய கடமை மனைவிக்கு உள்ளது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒருமனைவி அவள் அவளது கணவன் அவளைத் திருப்தி கொண்ட நிலையில் மரணித்தால் அவள் சுவனம் நுழைவாள். (திர்மிதி).


ஒரு வீடு விதவையைக் குடும்பத் தலைவியாக் கொண்டிருக்குமென்றால் அவள் மறுமணம் செய்து வைக்கப்படல் வேண்டும். குறிப்பாக இளம் வயதை உடையவளாக இருந்தால் மறுமணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து விடும். தீன் வீட்டில் நிலை நாட்டப்படாத வீடுகள் மறுமணம் செய்ய இயலாத விதவைகளின் உளக் குமறல்களினால் விபரீதமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

இவ்வாறே பிள்ளை வளர்ப்பு, திருமணம் செய்து கொள்ள ஆகுமாக்கப்படாதோர் (மஹ்ரமிகள்), ஆகுமாக்கப்பட்டோர் (அஜ்னபிகள்) உறவுகள், சுயஉழைப்பு, உழைப்பில் ஹலால் - ஹராம் பேணுதல், குடும்ப வாழ்க்கையை எளிமையாக அமைத்தல், பிரச்சினைகளைத் தீர்த்தல் போன்ற எல்லா நிலைகளிலும் தீனில் செல்வாக்கின் கீழ் வந்து விட்ட வீடே தீன் நிலை நாட்டப்பட்ட வீடாகும்.



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

வட்டி ஒரு பெரும் பாவம்

Svr.pamini 1. வட்டி என்றால் என்ன?: அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது. '...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279) இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130) 2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு: வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது. 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275) வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. 1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது. 2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும். 3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும். 3. வட்டி ஒரு பெரும் பாவம் : 'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 4. வட்டி ஒரு கொடிய குற்றம் : 'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ) மற்றொரு அறிவிப்பில், 'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன். 5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் : 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை: 1. நிரந்தர நரகம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085) நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர். ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான். 7. போர்ப் பிரகடணம்: வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள். 8. வட்டி வாங்குவோரின் அவல நிலை : 1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275) 2. நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962) 3. அல்லாஹ்வின் சாபம். 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 4. போர் பிரகடணம். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) 9. அடமானம்: அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார். இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன. முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும். நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும். 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 10. ஒத்தி வட்டியா?: ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும். ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 11. பேங்க்கில் பணம் போடலாமா? : வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது. இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது. இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது. இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும். 12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?: ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும். 13. குலுக்கல் சீட்டு: குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது. அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. 14. தவணை முறையில் பொருள் வாங்குவது: இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று. இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது. 15. வங்கியில் வேலை செய்வது: 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 16. பகடி கூடுமா?: பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார். பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது. 17. முடிவுரை: பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக! Svr.pamini