அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினைஇருக்கிறது.'50:35<<>>"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

இஸ்லாத்தைத் தாங்கும் ஐந்து தூண்கள் .!

ஒரு முஸ்லிமுடைய வாழ்க்கையை வரையறுக்கும் வரைச்சட்டங்களே இந்த ஐந்து தூண்கள்! இறைநம்பிக்கை, தொழுகை, நோன்பு (மூலம் நலிந்தோர் மீதான அக்கரை), ஜகாத் (மூலம் பொருளாதார தூய்மை), வசதி படைத்தோர் மக்கா மாநகருக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளுதல் ஆகியவையே அந்த வரைச்சட்டங்கள்!
1. இறைநம்பிக்கை
லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மத் ரஸூலுல்லாஹ்!
அல்லாஹ் (எனும்) ஏக இறைனைத் தவிர
வேறு இறைவன் இல்லை!
முஹம்மத் (ஸல்) அவர்கள்
அவனுடைய (இறுதித்)தூதர் ஆவார்கள்.
இறைநம்பிக்கையின் அடிப்படை அம்சமான இந்த பிரகடனம்“ஷஹாதத்” எனப்படுகின்றது. இறைநம்பிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் பூரண நம்பிக்கையுடன் மொழியும் ஒரு கொள்கைப் பிரமாணமே அது! இந்த கொள்கைப் பிரகடனத்தின் முதல் பகுதியானலாஇலாஹ இல்லல்லாஹ் என்பதைக் கவனியுங்கள்.
அரபுமொழியில் லாஇலாஹ இல்லல்லாஹ் என்பதன் பொருள் ‘வேறு இறைவன் (யாரும், எதுவும்) இல்லை, அல்லாஹ் எனும் ஏக இறைவனைத் தவிர!
விளக்கமாகச் சொன்னால், வேறு எவரோ அல்லது எந்த பொருளோ அல்லது எந்த ஒரு அதிகாரமோ அல்லது எந்த ஒரு செல்வ வளமோ எதுவொன்றுமே இறைவனாக – அல்லாஹ் வாக ஆக முடியாது!
அடுத்து வருவது, இல்லல்லாஹ் அல்லாஹ்வைத் தவிர! அதாவது படைப்பினங்கள் அனைத்தின் மூலகர்த்தாவாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை!
இக்கொள்கைப் பிரகடனத்தின் அடுத்த பகுதி முஹம்மத் ரஸூலுல்லாஹ் - முஹம்மத், அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள். அதாவது, மனிதகுலம் முழுவதற்கும் வழிகாட்டக்கூடிய ஒரு நற்செய்தி நம்மைப் போன்ற ஒரு மனிதர் மூலமாக இறைவனிடமிருந்து வந்திருக்கின்றது என்பதே இதன் விளக்கமாகும்!
2. தொழுகை
ஸலாத்! இதன் பொருள் இதுவே:- மேற்குறிப்பிட்ட ஒப்புவமை இல்லாத ஏக இறைவனுக்காக நிறைவேற்றப்படும் வழிபாட்டு முறையே இது! இதனையே நாம் தொழுகை என்கின்றோம். இது ஒவ்வொரு நாளும் ஐவேளைகள் நிறைவேற்றப்படுகின்றது!
வணக்கவாளிக்கும், அந்த வணக்கத்திற்குரியவனான படைத்த ஏக இறைவனுக்கும் இடையிலான நேரடித் தொடர்பே தொழுகை எனும் இந்த வழிபாடு! வழிவழியாய் வருகின்ற புரோகிதர் முறையை இஸ்லாம் எந்நிலையிலும் அனுமதித்தது கிடையாது! அதேபோன்று முற்றும் துறந்த முனிவர்களுக்கும் இம்மார்க்கத்தில் இடமில்லை! திருக்குர்ஆன்ஓதத் தெரிந்த ஒரு சாதாரண முஸ்லிம் கூட இந்தத் தொழுகையை வழிநடத்திச் செல்ல முடியும்.
இந்த ஐவேளைத் தொழுகையும் திருக்குர்ஆன் அருளப்பட்ட அரபிமொழியிலேயே ஓதப்படுகின்றது. எனினும் தனிப்பட்ட கோரிக்கைகளுக்கு இறைவனிடம் ஒருவர் இறைஞ்சினால், தாம் அறிந்த மொழியைக் கொண்டே வேண்டலாம்!
இறைக்கட்டளையின்படி நிறைவேற்றப்படும் கடமையான தொழுகைகள் அதிகாலை, மதியம், மாலை, சூரிய அஸ்தமனம் மற்றும் இரவு வேளைகளிலவற்றுக்கே உரிய ஒழுங்குடனும், முறையுடனும் ஒவ்வொரு நாளும் நிறைவேற்றப்படுகின்றன!
ஒரு முஸ்லிம் தான் வசிக்கும் இல்லங்களில், தான் பணியாற்றும் அலுவலகங்கள் – தொழிற்சாலைகள், தான் கல்வி பயிலும் பள்ளிகள், கல்லூரிகள் – பல்கலைக் கழகங்களிலென்று பரந்து விரிந்த பூமியின் தூய்மையான எப்பகுதியிலும் தனது தொழுகைகளை நிறைவேற்றிட முடியும். எனினும், வழிபாட்டுக்கென நிர்ணயிக்கப்பட்ட மஸ்ஜிதுகள்எனும் இறையில்லங்களுக்கு சென்று இதர முஸ்லிம் சகோதரர்களுடன் கூட்டாக ஓரணியில் நின்று தொழுவதே சிறப்புடையதும், அதிக நன்மையை ஈட்டித் தரக்கூடியதுமாகும்!
முஸ்லிம் நாடுகளுக்கு விஜயம் செய்யும் மாற்று மதத்தவர்கள், அவர்களின் தினசரி வாழ்வோடு கலந்து விட்ட இத்தகைய கூட்டு வழிபாட்டு முறையைக் கண்டு வியப்புறுகிறார்கள். இஸ்லாமிய வழிபாடு அவர்களிடையே பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறினால், அது மிகையல்ல!
3. ஜகாத்
இஸ்லாம் போற்றும் அடிப்படையான கொள்கைகளில் இதுவும் ஒன்று!
இப்பிரபஞ்சத்தில் வியாபித்து இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் உரிமையாளன் ஏக இறைவனான அல்லாஹ் ஒருவன் மட்டுமே! மனிதனிடம் இருக்கும் செல்வங்கள் அனைத்தும் இறைவன் அவனிடம் ஒப்படைத்துள்ள அமானிதமே அன்றி வேறில்லை!
ஜகாத் எனும் சொல் தூய்மைப்படுத்தல் மற்றும் வளர்தல் ஆகிய பொருள்களைக் கொண்டது. நமது உடைமைகளில் இருந்து இறைவன் நிர்ணயித்துள்ள விதிமுறைப்படி ஒரு குறிப்பிட்ட அளவை தேவையுடையோர்க்குத் தந்து உதவுவது வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமின் கடமை!
முஸ்லிம் ஒருவரின் இத்தகைய செயலால், இறைவன் அவர்களுடைய செல்வங்களைத் தூய்மைப் படுத்துகின்றான். அது மட்டுமல்ல, களை எடுக்கப்பட்ட தாவரங்கள் செழிப்பாக வளர்வது போன்று, தூய்மைப் படுத்தப்பட்ட இந்த செல்வ வளங்கள் ஜகாத் வழங்குவதன் மூலம் மேலும் வளர்கின்றன.
அதுமட்டுமல்ல, செலவு செய்யப்பட்ட இந்த செல்வம் பின்னர், அதிகப்படியான வருவாயாக அவருடைய கணக்கில் எழுதி வைக்கப்படுகின்றது. வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமும் ஹன்னுடைய செல்வங்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட ஜகாத்தை தாமே வழங்குகின்றார்கள். ரொக்கமாக இருக்கும் பணத்தில் 21.2 சதவீத அளவு ஜகாத்தாக வழங்குவதும் இதில் அடக்கம்! நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேலதிகமாக, இறையச்சமுள்ள ஒரு முஸ்லிம் தனது விருப்பப்படி தேவையுடையோருக்கும், வறியோருக்கும் தர்மமாக வழங்குகின்றார். இது ஸதகா எனப்படுகின்றது. இத்தகைய தர்மங்கள் இரகசியமாக நிறைவேற்றப்படுவது சிறப்பு!
இந்த ஸதகா எனும் சொல் விருப்ப தர்மம் எனும் பொருளில் வழங்கப்பட்டாலும், உண்மையில் இச்சொல் மிக விரிவான பொருளைக் கொண்டது.
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அருளினார்கள்:-
உன்னுடைய சகோதரனைப் பார்த்து
புன்முறுவல் பூப்பதும் ஒரு தர்மமே!
மேலும் கூறினார்கள்:-
“தர்மம் என்பது ஒவ்வொரு முஸ்லிமும்
அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று!”
அப்போது வினவப்பட்டது:-
“(ஸதகா) வழங்குவதற்கு ஒருவரிடம்
எதுவும் இல்லையென்றால்……..?
முஹம்மத் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்:-
“(ஒருவர்) தனது கைகளால் சுயமாக
தானே சம்பாதித்தவற்றில்
தனது தேவைக்கு வைத்துக் கொள்ளட்டும். பிறகு,
அதிலிருந்து சிறிதை தர்மம் செய்யட்டும்!”
மீண்டும் வினவினர்:-
“அவரால் (உழைக்க) – பணிபுரிய
இயலவில்லை என்றால்…….?
மீண்டும் பதிலளித்தார்கள்:-
“அத்தகையோர் ஏழைகளுக்கும் 
தேவையுடையோர்க்கும் உதவி புரியட்டும்!”
நபித்தோழர்கள் மேலும் வினவினார்கள்:-
“அவரால் அதனையும் செய்ய இயலாவிட்டால்……?
முஹம்மத் (ஸல்) அவர்கள் (அதற்கு) பதிலளிக்கையில், “நன்மை
புரியும்படி பிறரைத் தூண்ட வேண்டும்!” 
என்றார்கள்.
நபித்தோழர்கள்,
“அதனைச் செய்யவும் அவரால் இயலவில்லையெனில்….? என கேட்டபோது முஹம்மத் (ஸல்) அவர்களின் பதில் இவ்வாறு இருந்தது:-
“தீயவற்றை புரிவதிலிருந்து
அவர் தம்மைத் தடுத்துக் கொள்ளட்டும்.
அதுவும் ஒரு தர்மமே!
4. புனித நோன்பு
வருடந்தோரும் புனித ரமளான் மாதத்தில் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் நோன்பு நோற்கின்றனர். அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னர் ஆரம்பித்து அந்தி சாயும்வரை கடைப்பிடிக்கப்படும் இத்தகைய நோன்பின் போது, முஸ்லிம்கள் உண்ணுதல், பருகுதல் ஆகியவற்றிலிருந்தும் உடலுறவில் ஈடுபடுவதிலிருந்தும் விலகி நிற்கின்றார்கள்.
எனினும் முதியோர், நோயுற்றோர், பயணத்தில் இருப்போர், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் இந்த கடமையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். என்றாலும், அவர்கள் வருடத்தின் பிற நாட்களில் விடுபட்ட இந்த நோன்பினைப் பூர்த்தி செய்ய வேண்டும். உடல்ரீதியாக இதனை நிறைவேற்ற அவர்களால் இயலவில்லையெனில், விடுபட்ட ஒவ்வொரு நோன்புக்குப் பகரமாக ஒரு ஏழைக்கு உணவு வழங்க வேண்டும். வயது வந்த சிறுவர் – சிறுமியரும் நோன்பு நோற்கவும் (தொழுகையை நிறைவேற்றவும்) செய்கின்றனர். எனினும், அவர்களில் பலர் இளவயது முதற்கொண்டே இதனைக் கடைப்பிடிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
உடலுக்கு நலம்பயக்கின்ற ஒரு சிறந்தே மருந்தே நோன்பு! அது மட்டுமல்ல, தம்மை உளத்தூய்மைக் கொண்டவர்களாக மாற்றிக் கொள்ளும் ஒரு சிறந்த வழிமுறையாகவும் நோன்பு அமைந்திருக்கின்றது.
நோன்பு நோற்கும் ஒரு முஸ்லிம், ஒரு சிறு கால அளவில் உணவு, உடலுறவு ஆகியவற்றிலிருந்து இன்னபிற உலகியல் தேவைகளிலிருந்தும் தன்னை விலக்கி வைத்துக் கொள்கின்றார். இவ்வாறு செய்வதன் மூலம் பசிபட்டினியால் வாடும் வறியோரின் நிலையை தானும் உணர்கின்றார். இவ்வாறு ஒரு நோன்பாளி உணவையும் இன்னபிற ஆகுமான தேவைகளையும் ஒதுக்கி வாழ்ந்தாலும், உண்மையில் அவருடைய ஆன்மிக வாழ்வு முன்னேற்றப் பாதையில் நடபோட ஆரம்பிக்கின்றது!
5.  (ஹஜ்) புனிதப் பயணம்
ஸவூதி அரேபியாவின் மக்கா மாநகரில் அமைந்த கஅபா எனும் உலகின் முதல் இறை இல்லத்துக்கு புனிதப் பயணம் செல்வது வசதியும் உடல் நலனும் கொண்ட ஒவ்வொரு முஸ்லிமான ஆண்-பெண் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. பரந்து விரிந்த பூமியின் நாலாப்புறங்களிலிருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்தும் ஏறக்குறைய 20 இலட்சம் முஸ்லிம்கள் ஒவ்வொரு வருடமும் இந்த இறையில்லத்துக்கு புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். வேறுபட்ட பல தேசங்களிலிருந்தும் இன, மொழி, வர்ண மாச்சர்யமின்றி முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுகூடும் ஒரு அரிய சந்தர்ப்பத்தை இந்த ஹஜ் எனும் சகோதரத்துவ மாநாடு ஏற்படுத்தித் தருவது எத்துணை பெரிய விஷயம்..!
மக்கா மாநகரம் வருடந்தோறும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தாலும், ஹஜ் எனும் புனிதப்பயணக் கடமை ஆரம்பமாவது, இஸ்லாமிய நாட்காட்டியின் 12வது மாதமான துல்ஹஜ் மாதத்தில் தான்! (இஸ்லாமிய நாட்காட்டி சந்திரனை அடிப்படையாக வைத்து  – Lunar Calendar கணிக்கப்பட்டது. இதனால், இந்த துல்ஹஜ் மாதம் கோடையிலும் குளிரிலும் மாறி மாறி வரும்!)
ஹஜ் எனும் புனிதப் பயணம் மேற்கொள்ளும் வணக்கவாளிகள் அதற்குரிய எளிமையான வெள்ளைச் சீருடையை அணிகின்றார்கள். இதன் மூலம் இறைவன் முன்பாக மக்கள் அனைவரும் சமம், அவர்கல் மத்தியில் எந்தவொரு ஏற்றத்தாழ்வும், பண்பாட்டு வேற்றுமையும் பாராட்டப்படக்கூடாது எனும் உணர்வு மேலோங்கச் செய்யப்படுகின்றது.
இந்த ஹஜ் எனும் புனிதப் பயணத்தை நிறைவேற்றும் சடங்கின் தோற்றுவாய் இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் காலகட்டத்திலிருந்து ஆரம்பிக்கின்றது. இப்புனிதப் பயணத்தின் முக்கிய கடமைகளில் சில:-
‘கஅபா’ – இறையில்லத்தை ஏழு முறை வலம் வருதல்
இப்ராஹீம் (அலை) அவர்களின் துணைவியரான ஹாஜிரா (அலை) அவர்கள் குடிநீருக்காக ஸஃபா – மர்வா குன்றுகளுக்கிடையே ஓடி அலைந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் விதமாக அவ்விரு குன்றுகளுக்கிடையில் ஓடுதல்.
அடுத்து, அரஃபா எனும் பரந்து விரிந்த ஓர் திறந்த வெளியில் ஒன்று கூடுவார்கள். இறைவனிடம் பாவமன்னிப்பைக் கோரி மனம் உருகிப் பிரார்த்திப்பார்கல். இறைவனின் இறுதித் தீர்ப்புக்காக கூடியிருக்கும் மறுமைநாளை நினைவுபடுத்தும் ஒரு முன்னோட்டமாக இந்த ஒன்றுகூடும் நிகழ்ச்சி அமைந்திருப்பது ஒவ்வொருவருடை உணர்வையும் சிலிர்த்திட வைக்கும். கடந்த நூற்றாண்டுகளில் ஹஜ் நிறைவேற்ற பயணம் மேற்கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. ஆனால், இன்று மக்கா மாநகர் அமைந்த சவூதி அரேபிய அரசாங்கம் இலட்சோபலட்சம் புனிதப் பயணிகளுக்குத் தேவையான நவீன வசதிகள், குடிநீர், மற்றும் மருத்துவ வசதிகள் என்ற அனைத்தையும் கச்சிதமாக செய்து தருகின்றார்கள்.
ஈதுல் அல்ஹா எனும் தியாகத்திருநாள் கொண்டாட்டத்துடன் இந்த ஹஜ் புனிதக் கடமை நிறைவுக்கு வருகின்றது. அந்நாளில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகையை நிறைவேற்றியும், அன்பளிப்புகள் வழங்கியும் வாழ்த்துக்களைப் பரிமாற்றிக் கொள்கின்றார்கள்.
இந்தப் பண்டிகை நாளும், புனித ரமலான் மாத நோன்பை நிறைவு செய்து கொண்டாடும் ஈதுல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாளும் இஸ்லாமிய நாட்காட்டியில் போற்றப்படும் இருபெரும் பண்டிகைகளாகும்.
நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

வட்டி ஒரு பெரும் பாவம்

Svr.pamini 1. வட்டி என்றால் என்ன?: அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது. '...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279) இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130) 2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு: வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது. 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275) வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. 1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது. 2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும். 3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும். 3. வட்டி ஒரு பெரும் பாவம் : 'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 4. வட்டி ஒரு கொடிய குற்றம் : 'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ) மற்றொரு அறிவிப்பில், 'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன். 5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் : 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை: 1. நிரந்தர நரகம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085) நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர். ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான். 7. போர்ப் பிரகடணம்: வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள். 8. வட்டி வாங்குவோரின் அவல நிலை : 1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275) 2. நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962) 3. அல்லாஹ்வின் சாபம். 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 4. போர் பிரகடணம். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) 9. அடமானம்: அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார். இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன. முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும். நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும். 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 10. ஒத்தி வட்டியா?: ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும். ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 11. பேங்க்கில் பணம் போடலாமா? : வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது. இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது. இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது. இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும். 12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?: ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும். 13. குலுக்கல் சீட்டு: குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது. அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. 14. தவணை முறையில் பொருள் வாங்குவது: இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று. இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது. 15. வங்கியில் வேலை செய்வது: 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 16. பகடி கூடுமா?: பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார். பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது. 17. முடிவுரை: பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக! Svr.pamini